ஆலய உண்டியலில் திருட முற்ப்பட்ட இளைஞன் கைது

மட்டக்களப்பு – கொக்குவில் சின்ன ஊறணி பேச்சியமன் ஆலய உண்டியலை உடைத்து திருட முற்பட்ட இளைஞன் ஒருவரை பொதுமக்கள் மடக்கிபிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இரவு 11 மணியளவில் சின்ன ஊறணி பேச்சியமன் கோயிலில் சத்தம் கேட்டதை அடுத்து பிரதேச மக்கள் ஆலயத்திற்கு சென்றபோது உண்டியலை கல்லால் அடித்து உடைக்க முயற்சித்துள்ளார்.

இதனையடுத்து சந்தேகநபரை மடக்கிப்பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்டவர் அதே பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞன் எனவும், இவருக்கு எதிராக பல்வேறு குற்றச் செயல்கள் சுமத்தப்பட்டு, நீதிமன்ற பிணையில் வெளிவந்தவர் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

கைதான சந்தேகநபரை (26) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது இவரை எதிர்வரும் 8ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

Recommended For You

About the Author: webeditor