பண பிரச்சினை உள்ளவர்களுக்கான பரிகாரம்

ஏதோ ஒரு எதிர்பாராத கஷ்டத்தில் விழுந்து வறுமையில் சிக்கி உள்ளவர்கள் அதிலிருந்து மீளுவதற்கு வழி கிடைக்கவில்லை எனும் பட்சத்தில் வியாழக்கிழமை தோறும் இந்த வழிபாட்டினை மேற்கொண்டால் பண பிரச்சனைக்கு நிச்சயமாக கூடிய சீக்கிரத்தில் ஒரு தீர்வு கிடைத்துவிடும்.

எந்த பிரச்சனையும் தீர்க்க முடியாத பிரச்சனை அல்ல. உலகத்தில் இருக்கும் அத்தனை பிரச்சனைக்கும் தீர்வு உண்டு.

கஷ்டத்திற்கு விடிவுகாலம் கிடைக்க இந்த மந்திரம் கூட ஒரு வழியை காட்டலாம்.

பணக்கஷ்டம் தீர குபேர மந்திரம்

இந்த மந்திரத்தை வியாழக்கிழமை அன்று உச்சரிக்க வேண்டும். நேரம் காலை 6 மணிக்கு அல்லது மாலை 6 மணிக்கு. குறிப்பாக காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் இந்த மந்திரத்தை உச்சரிப்பது இரட்டிப்பு பலனை கொடுக்கும்.

காலையில் எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு நெற்றியில் வாசம் நிறைந்த விபூதியை இட்டுக் கொள்ளுங்கள்.

நறுமணம் நிறைந்த விபூதியின் வாசம் நம்முடைய மனதை முதலில் அமைதி படித்து விடும். பிறகு இந்த மந்திரத்தை உச்சரிக்க வழக்கம்போல பூஜை அறையில் ஒரு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு குலதெய்வத்திடம் ஆசிர்வாதத்தை பெற்றுக் கொள்ளுங்கள்.

பிறகு இந்த இரண்டு வரி மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

குபேர மந்திரம்

ஓம் நமோ நமசிவாய சர்வ குபேர வசி வசி பசி ஓம்.

கூடுமானவரை தினம் தோறும் 108 முறை இந்த மந்திரத்தை உச்சரித்து விட்டு தினசரி வேலையை தொடங்குங்கள்.

எப்பேர்ப்பட்ட பண கஷ்டமாக இருந்தாலும் அதை சரி செய்யக்கூடிய சக்தி இந்த மந்திரத்திற்கு உண்டு.

பிரச்சனைகள் குறையும்

சிவபெருமானின் அருள் ஆசியும் கிடைக்கும். அதே சமயம் குபேரரின் அருள் ஆசியும் கிடைக்கும். பாவ கணக்குகள் தீரவும் புண்ணிய கணக்குகள் சேரவும், பிரச்சனைகள் குறையவும் இந்த ஒரு எளிய வழிபாட்டு முறையே போதும்.

நம்பிக்கையோடு உச்சரிப்பவர்களுக்கு நிச்சயமாக நல்லது மட்டுமே நடக்கும். நம்பிக்கை இல்லாமல் என்ன செய்தாலும் அதன் மூலம் பலன் ஒரு துளி அளவும் கிடைக்காது.

ஆன்மீகத்திலும் பரிகாரத்திலும் நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன பரிகாரத்தை முயற்சி செய்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

Recommended For You

About the Author: webeditor