தன்னை தானே சுட்டுக் கொண்ட இராணுவ வீரர்

இராணுவ வீரர் ஒருவர் தனது துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பனாகொட இராணுவ முகாமில் பணிபுரிந்து வந்த இராணுவ வீரர் ஒருவரே இந்த தவறான முடிவை எடுத்துள்ளார்.

மேலும் இச் சம்பவம் இன்று மாலை (24-02-2023) பனாகொடை இராணுவ முகாமின் பீரங்கிப்படையணி சிப்பாய்களின் விடுதி அருகே இடம்பெற்றுள்ளது.

மாத்தளை, நாவுல பிரதேசத்தைச் சேர்ந்த திருமணமாகாத, 28 வயதுடைய இந்திக சதுரங்க அத்தநாயக்க எனும் இராணுவ வீரரே இவ்வாறு உயிரிழந்திருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

Recommended For You

About the Author: webeditor