உள்ளூராட்சி தேர்தல் குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த வெளியிட்டுள்ள செய்தி

உள்ளூராட்சி மன்ற சபைத் தேர்தலை நடத்தப்பட வேண்டும் என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ (Mahinda Rajapaksa) தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் (24-02-2023) கண்டியில் வைத்து ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தேர்தலை நடத்த வேண்டியது கடமையாகும். ஆனால், பணம் இல்லாவிட்டால் தேர்தலை நடத்த முடியாது. எந்த சந்தர்ப்பத்திலும் தேர்தலுக்கு நாம் தயார்.

இந்த அரசாங்கத்திற்கு வெற்றிபெறுவது தொடர்பில் உறுதிப்பாடு இல்லை.

இருப்பினும், தேர்தல் நடத்தப்பட வேண்டும். அப்போதுதான் கட்சியின் நிலையையும், மக்களின் எண்ணத்தையும் அறிந்துகொள்ள முடியும் என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: webeditor