நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள குறைபாடுகள் குறித்து அதிகாரிகளுக்கு அமைச்சர் ஜீவன் தொண்டமான் விடுத்துள்ள பணிப்புரை!

பதுளை, எட்டம்பிட்டிய நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள குறைப்பாடுகளை விரைவில் நிவர்த்தி செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் (Jeevan Thondaman) பணிப்புரை விடுத்துள்ளார்.

அண்மையில் அமைச்சர் ஜீவன் தொண்டமான், எட்டம்பிட்டிய நீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கண்காணிப்பு பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது, ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது அங்கு நிலவும் சில குறைப்பாடுகள் சம்பந்தமாக அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.

இவற்றை உடன் நிவர்த்தி செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு, அமைச்சருடன் பணிப்புரை விடுத்தார்.

Recommended For You

About the Author: webeditor