கட்டுநாயக்கவில் ஆயுதத்துடன் களமிறங்கிய விசேட அதிகாரிகள்!

இலங்கையில் கடந்த ஆண்டு (2022) மிகபெரும் ஆட்சி மாற்றம் இடம்பெற்றது, அதன் பின்னணியில் இருப்பது அமெரிக்கா என்பது எல்லோருக்கும் தெரியும் என இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் ஒருவரின் இணைய வழி போட்டியில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் தொடர்ந்தும் தெரிவித்தது,

நாட்டின் ஆட்சி மாற்றத்தின், தொடர்ச்சியாகத்தான், அதாவது அந்த இடத்திற்கு யாரை கொண்டு வரவேண்டும் என்று அமெரிக்கா விரும்பியதோ அவரை கொண்டு வந்த பின்னரான தொடர் நடவடிக்கைகளைத் தான் நாங்கள் இப்போது பார்க்கின்றோம்.

அமெரிக்காவின் பாதுகாப்பு திணைக்களத்தைச் சேர்ந்த இந்தோ பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பு துணை உதவிச் செயலாளர் தலைமையில் ஏறத்தாள 20 பேர் படைத்துறை அதிகாரிகள், இராஜதந்திரிகள் உள்ளிட்ட ஏறத்தாள 20 பேரை ஏற்றியவாறு C17 Globemaster ரக விமானம் திடீரென்று இலங்கையை வந்தடைந்தது. அவர்கள் ஆயுதங்களுடன் தான் வந்தார்கள்.

இலங்கையிலும் அவர்கள் பாதுகாப்பு செயலாளருடன் தான் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: webeditor