நடைபெறவிருந்த கன்னிப் பேரணியை ஒத்திவைக்க தீர்மானிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன

நடைபெறவிருந்த கன்னிப் பேரணியை ஒத்திவைக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களால் கட்சித் தலைமையகத்தில் இன்றைய தினம் (23-02-2023) பிற்பகல் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஒத்திவைப்பு தற்காலிக நடவடிக்கை எனவும், மார்ச் மாதம் 2வது வாரத்தில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன (S. M. Chandrasena) தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கன்னிப் பொதுக்கூட்டம் அநுராதபுரம் சல்காடு மைதானத்தில் நடைபெறுவதற்குத் தயாராகியுள்ளது.

Recommended For You

About the Author: webeditor