நாளை தெல்லிபளை ஆதார வைத்தியசாலையின் ஒட்சிசன் தொகுதி திறந்து வைக்கப்படவுள்ளது

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு
லயன்ஸ் கழகத்தால் ஒட்சிசன் தொகுதி!
ஒரு கோடியே 90 லட்சம் ரூபா செலவில் அமைப்பு

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் புற்றுநோய் சிகிச்சைபெறும் நோயாளர்களுக்கு அவர்களின் ஒவ்வொரு படுக்கைகளுக்கும் ஒட்சிசன் சுவாசம் வழங்கும் பொருட்டு ஒட்சிசன் தொகுதி ஒரு கோடியே 90 லட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்டு நாளை (வியாழக்கிழமை) பிற்பகல் 2.30 மணிக்கு திறந்துவைக்கப்பட்டு வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட உள்ளது.

லயன்ஸ் கழகம் மாவட்டம் 306 பி 1 இன் முன்னாள் மாவட்ட ஆளுநர் லயன் ஆர்.எல்.ராஜ்குமார் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வில்இ பிரதம விருந்தினராக லயன்ஸ் கழக மாவட்ட ஆளுநர் லயன் வைத்திய கலாநிதி அநோமா விஜயசிங்கவும்இ சிறப்பு விருந்தினராக முன்னாள் சர்வதேச பணிப்பாளர் சுனில் வட்டவலவும் கலந்துகொள்ள உள்ளனர்.

2021 -2022 ஆம் ஆண்டுக்கான லயன்ஸ் கழக மாவட்ட ஆளுநர் லயன் ஆர்.எல்.ராஜ்குமாரின் பெருமுயற்சியால் லயன்ஸ் கழக பெண்கள் அணியினரின் தலைவியாகிய லயன் மரியன் ராஜ்குமாரின் ஒழுங்கமைப்பில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை புற்றுநோயாளர்களுக்கு ஒட்சிசன் தொகுதி ஒன்றை அமைத்து வழங்கவேண்டும் என்ற பெருநோக்கோடு அனைத்து லயன்ஸ் கழக உறுப்பினர்களிடமிருந்தும் சர்வதேச லயன்ஸ் கழகத்திடமிருந்தும் பெறப்பட்ட நிதியிலேயே இந்த ஒட்சிசன் தொகுதி அமைக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொகுதி நாளை (வியாழக்கிழமை) உத்தியோகபூர்வமாகத் திறந்துவைக்கப்பட்டு வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் றெமான்ஸிடம் கையளிக்கப்பட உள்ளது.

Recommended For You

About the Author: webeditor