ஸ்ரீ நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் அருங்காட்சியகம் திறந்து வைப்பு!

வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் மீள்புனர்நிர்மாணம் செய்யப்பட்ட அருங்காட்சியகம் இன்று ஆலய அருகாமையில் உள்ள மணி மண்டபவத்தில் வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் தலைவர் ஸ்ரீ நாகராஜ சண்முகம் தலைமையில் திறந்துவைக்கப்பட்டது…

இதில் அருங்காட்சியகத்தில் வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் தொண்டுகள் ஆற்றிய சமயத்தலைவர்கள்,நாகபூசணி அம்மனின் தொல்லியல் சாசனங்கள் அடங்கிய நுதன சானங்கள் என்பன இவ் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது…

இதில் ஊர்காவற்துறை பதவிநிலை அதிகாரி வசந்த சேன,மற்றும் ஆலய நிர்வாக உறுப்பினர்கள்,அடியார்கள் பலரும் கலந்துகொண்டனர்….

இதற்கான முழு நிதிபங்கு வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் ஊடாக முன்னேடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது……

Recommended For You

About the Author: webeditor