யாழில் மது போதையில் விபத்தை ஏற்ப்படுத்தி விட்டு தப்பிச் சென்ற இளைஞர்

யாழ்ப்பாணத்தில் இருந்து மதுபோதையில் காரைநகரை நோக்கி பயணித்த இளைஞர் ஒருவர் துவிச்சக்கவண்டியில் வந்த இளம் குடும்ப பெண் மீது மோதியுள்ளார்.

இந்த விபத்து சம்பவம் யாழ். கொட்டடியில் அமைந்துள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் களஞ்சியசாலைக்கு அருகாமையில் நேற்று இரவு 8.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பெண் கொட்டடியில் இருந்து அருகில் உள்ள பலசரக்கு கடை ஒன்றுக்கு வந்த நிலையில் விபத்து ஏற்பட்டு சிறு காயங்களுடன் யாழ் போதான வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டார்.

மதுபோதையில் விபத்தை எற்படுத்திவிட்டு குறித்த இளைஞர் தனது மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு தப்பி ஓடியுள்ளார்.

இது தொடர்பாக மேலதிக விசாரணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: webeditor