மட்டக்களப்பு கொம்மாதுறை தீவுப் பகுதியில் நீண்ட நாளாக உயிருக்கு போராடும் யானை

மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொம்மாதுறை – தீவுப் பகுதியில் காட்டு யானை ஒன்று, கால் ஒன்றில் ஏற்பட்ட காயம் காரணமாக நடக்க முடியாமல் கீழே விழுந்து சுமார் 10 நாட்களாக உயிருக்கு போராடி வருகிறது.

கொம்மாதுறை தீவுப்பகுதியினுள் வீழ்ந்து கிடந்த நிலையில் உயிருக்கு போராடும் குறித்த யானை 10 நாட்களுக்கு தினங்களுக்கு முன் காயப்பட்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் யானையை பராமரித்து வருவதுடன், அவர்களினால் உணவு வழங்கப்படுகின்ற போதிலும் , உணவு, நீர் போதியளவு கிடைக்காமை உற்கொள்வதில் சிரமப்படுவதால், யானை அவதியுறுகிறது.

அதிகாரிகளின் அர்ப்பனிப்பான கரிசணையுடனான முயற்சி இருந்தால் யானை காப்பற்றப்படும் என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

Recommended For You

About the Author: webeditor