இன வெறியை தூண்டுவதாக சீமான் மீது புகார்

இனவெறியை தூண்டும் வகையில் பேசி வரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் சாட்டை துரைமுருகன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.

மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் அளிக்கப்பட்ட புகார் மனுவில், வட மாநில இளைஞர்கள் பற்றி எப்போதும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி வரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் சாட்டை துறைமுகன் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது.

கடுமையாக கண்டிக்க எடுக்க வேண்டும்
வட மாநில இளைஞர்கள் பலர் தங்களின் குடும்பத்தை காப்பாற்றுவதற்காக தமிழகத்திற்கு வந்து வேலை பார்த்து வரும் நிலையில் அவர்களை அடித்து துரத்த வேண்டும் என்று தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் சாட்டை துரைமுருகனும் பேசி வருகின்றார்கள்.

வட மாநில தொழிலாளர்களுக்கு எதிராக இனவெறியை தூண்டுகின்ற வகையில் ஒரே இடத்தில் வேலை செய்யும் தமிழ்நாடு தொழிலாளர்களுக்கும் வட மாநில தொழிலாளர்களுக்கும் இடையே மோதல் போக்கை உருவாக்குகின்ற வகையில் அவர்கள் நடந்துகொள்கின்றனர்.

வடக்கன் வரும்போது 25 கிலோ கஞ்சாவோடு வருகிறான். பகலில் வேலை பார்த்துவிட்டு இரவில் கஞ்சா விற்கின்றான். நமது பெண்களை கையைப் பிடித்து இழுப்பான். நமது குழந்தைகளை கடத்திச் சென்று விடுவான் என்ற சீமான் தொடர்ச்சியாக பேசி வருகிறார் .

சமூகத்தில் இதனால் அசாதாரண சூழ்நிலை உருவாகி சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது . எனவே இனவெறியை ஏற்படுத்த துடிக்கும் சீமானையும் சாட்டை துரைமுருகனையும் காவல்துறையினர் கடுமையாக கண்டிக்க எடுக்க வேண்டும், நாம் தமிழர் கட்சி கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

Recommended For You

About the Author: webeditor