யாழில் உயிரிழந்த மகனின் சிறுநீரகத்தை தனமாக வழங்கிய பெற்றோர்

விபத்தில் உயிரிழந்த தனது மகனின் சிறுநீரகத்தை தானமாக வழங்கிய பெற்றோரை யாழ்.போதனா வைத்தியசாலை கௌரவித்துள்ளது.

அன்றாட வாழ்க்கையில் சடுதியான இறப்பின் பின்னர் சிறுநீரகம் போன்ற உறுப்புகளை தானம் செய்வதனால் அவதியுறும் இன்னொருவருக்கு உயிர் வாழ சந்தர்ப்பம் ஏற்படுகின்றது.

அந்த வகையில் மேற்படி சிறுநீரக தானத்தை பெற்றோரின் ஒப்புதலுடன் அவர்கள் விருப்பத்தின் பெயரில் இன்னொருவருக்கு வழங்கியமையால் சிறுநீரக செயலிழப்பினால் அவதியுற்ற ஒருவர் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சையின் பின்னர் இன்று சுகமாக வாழ்கின்றார்.
இவ்வாறான நிலையில், மகனின் சிறுநீரகத்தை தானமாக வழங்க சம்மதம் தெரிவித்த பெற்றோரை அண்மையில் வைத்தியசாலைக்கு அதிதிகளாக அழைக்கப்பட்டு அவர்களினால் சிறுநீரக குருதி சுத்திகரிப்பு பிரிவில் விரிவாக்கம் செய்யப்பட்ட மேலும் 3 சிறுநீரக சுத்திகரிப்பு இயந்திர பகுதி திறந்து வைக்கப்பட்டது.

மேற்படி மூன்று சிறுநீரக சுத்திகரிப்பு இயந்திரங்களை வழங்கியவர்களுக்கு வைத்தியசாலை சார்பில் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி நன்றிகளை தொிவித்தார்.

இந்த நிகழ்வில் வைத்தியசாலை வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், தாதியர்கள், ஏனைய உத்தியோகத்தர்கள் மற்றும் மருத்துவ பீடாதிபதி கலந்து சிறப்பித்தனர்.

Recommended For You

About the Author: webeditor