யாழில் போதைப் பொருட்களுடன் இரு இளைஞர்கள் கைது!

யாழ்.நெல்லியடி – இமையாணன் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் வைத்து ஹெரோயின் போதைப் பொருளுடன் இரு இளைஞர்கள் நெல்லியடி பொலிஸ் நிலைய விசேட புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மானிப்பாய் மற்றும் நல்லூர் பிரதேசங்களை சேர்ந்த 24, 27 வயதான இரு இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸார் விசாரணை

இவர்களிடமிருந்து சுமார் 63 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இவர்களை நாளை பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக கூறியுள்ள நெல்லியடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor