இலங்கைக்கு உதவ தயாராகும் பாரிஸ் க்ளப்

கடன் வழங்கும் நாடுகளின் அமைப்பான பாரிஸ் க்ளப், (Paris Club) இலங்கைக்கு நிதி உத்தரவாதங்களை வழங்கத் தயாராக உள்ளது.

தகவல் அறிந்த வட்டாரத்தை மேற்கோள்காட்டி ரொய்ட்டர்ஸ் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) 2.9 பில்லியன் டொலர் உதவியைப் பெற்றுக்கொள்ள தேவையான முக்கிய படியாக இது அமையவுள்ளது.

பாரிஸ் க்ளப் “விரைவில்” தனது ஆதரவை அறிவிக்க உள்ளது என்று ரொய்ட்டர்ஸிடம் முக்கிய தகவல் மூலம் ஒன்று தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: admin