யாழில் சட்டவிரோத மண் அகழ்விற்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம்!

சட்டவிரோத மணல் அகழ்வு, சட்டவிரோத சவுக்கு மரம் வெட்டுதல், மற்றும் போதைப்பொருள் பாவனையை தடுக்கக் கோரி மணல்காட்டில் கவனயீர்ப்பு பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இக் கவனயீர்ப்பு போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.

மணல்காடு சவுக்கம் தோப்பு பகுதியிலிருந்து மணல்காடு தேவாலயம் வரை வீதியால் பேரணியாக சென்றனர்.

“மரங்களை வெட்டி வளங்களை அழிக்காதே“, “மது போதையை கட்டுப்படுத்து“, “சட்டவிரோதமான மணல் அகழ்வை தடுத்து நிறுத்துங்கள்“ உட்பட பல்வேறு பதாதைகள் ஏந்தியவாறு பேரணியாக சென்றனர்.

இதில் மணல்காடு கிராமத்திற்க்குட்பட்ட, சிறுவர்கள், இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: webeditor