பலாத்கார குற்றவாளிக்கு வழங்கிய தீர்ப்பு

பெண்ணொருவரை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளி, பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஒப்புக்கொண்ட பின்னர், பெஷாவர் உயர் நீதிமன்றம் அவரை விடுதலை செய்துள்ளது என்று அவரது வழக்கறிஞரை மேற்கோள் காட்டி சீஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த தீர்ப்பு பாகிஸ்தானில் பாலியல் வன்முறையை இயல்பாக்கும் அபாயம் உள்ளது என்று உரிமை ஆர்வலர்கள் இந்த முடிவுக்கு சீற்றம் தெரிவித்துள்ளனர்.

23 வயதான தௌலத் கான், 36 வயதான காதுகேளாத பெண்ணை 2020 ஆம் ஆண்டு கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் ஸ்வாட் பகுதியில் பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டதாக அவரது வழக்கறிஞர் அம்ஜத் அலி கானை மேற்கோள் காட்டி சீஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது.

தௌலத் கானுக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம் 100,000 ரூபாய் அபராதம் செலுத்துமாறும் தீர்ப்பளித்தது. பலாத்காரத்துக்குப் பின்னர் அந்த பெண் குழந்தையை பெற்றெடுத்தார் என்று வழக்கறிஞர் தெரிவித்தார்.

ஷரியா சட்டத்தின் அடிப்படையில் முடிவெடுக்கும் முதியோர் குழுவான உள்ளூர் “ஜிர்கா” மூலம் நீதிமன்றத்துக்கு வெளியே சமரசம் செய்து கொண்டதைத் தொடர்ந்து டிசெம்பரில் இருவரும் சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொண்ட பின்னர் தௌலத் கானை விடுதலை பெஷாவர் நீதிமன்றம் செய்தது. .

பெஷாவர் நீதிமன்றத்தின் தீர்ப்பை “மோசமான சட்ட மீறல்” மற்றும் “நீதியின் கருச்சிதைவு” என்று பாகிஸ்தானின் மனித உரிமைகள் ஆணைக்குழு விவரித்துள்ளது.

நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவும், பெண்களின் உரிமைகளுக்கான அதன் உறுதிப்பாட்டை நிலைநிறுத்தவும் அரசுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

பாகிஸ்தானின் மனித உரிமைகள் ஆணையத்தின் அறிக்கையின்படி, 2021 ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் 5,200க்கும் மேற்பட்ட பெண்கள் கற்பழிக்கப்பட்டதாக சிஎன்என் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், பயத்தின் காரணமாக குற்றங்கள் பெரும்பாலும் குறைவாகப் புகாரளிக்கப்படுவதால், இந்த எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கலாம் என்று ஆர்வலர்கள் கூறினர்.

2020 டிசெம்பரில், வழக்குகளை நான்கு மாதங்களுக்குள் விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்தை நிறுவவும், முறைப்பாடு அளிக்கப்பட்ட ஆறு மணி நேரத்துக்குள் பெண்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யவும் பாகிஸ்தான் அதன் கற்பழிப்பு சட்டங்களை கடுமையாக்கியது என சிஎன்என் அறிக்கையிட்டுள்ளது.

இருப்பினும், பாக்கிஸ்தான் தனது பெண்களை தொடர்ந்து தோல்வியடையச் செய்து வருவதாகவும், குடும்ப வன்முறையை குற்றமாகக் கருதும் நாடு தழுவிய சட்டம் இல்லை என்றும் ஆர்வலர்கள் கூறியுள்ளனர்

Recommended For You

About the Author: admin