மட்டக்களப்பில் புனித அந்தோனியார் திருச்சொரூபத்திலிருந்து கண்ணீர் வடியும் அற்ப்புதம்!

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட கூழாவடியில் உள்ள புனித அந்தோனியார் திருச்சொரூபத்திலிருந்து கண்ணீர் வடியும் அதிசயத்தினை காண்பதற்காக பெருமளவானோர் குவிந்துவருகின்றனர்.

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட கூழாவடி சந்தியில் உள்ள புனித அந்தோனியார் திருச்சொரூபத்தில் இன்று மாலையிலிருந்து கண்ணீலிருந்து தண்ணீர்போன்ற திரவம் வடிந்துவருகின்றது.

இது தொடர்பான செய்தி பரவியதை தொடர்ந்து மட்டக்களப்பின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பெருமளவான மக்கள் திருச்சொருபம் உள்ள இடத்திற்கு வந்து பார்வையிட்டுச்செல்வதை காணமுடிகின்றது.
இதன் காரணமாக குறித்த பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதையும் அவதானிக்கமுடிந்தது.

Recommended For You

About the Author: webeditor