அம்பாறையில் தமிழரசு சார்பில் பா.உ கலையரசனால் இன்றைய தினம் வேட்புமனு கையளிப்பு…

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக இலங்கத் தமிழ் அரசுக் கட்சி அம்பாறை மாவட்டத்தில் இன்றைய தினம் வேட்புமனு கையளிப்புச் செய்தது.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் அவர்களால் வேட்புமனுக்கள் கையளிக்கப்பட்டன.

அம்பாறை மாவட்டத்தின் காரைதீவு, திருக்கோவில், ஆலையடிவேம்பு, பொத்துவில், நாவிதன்வெளி, சம்மாந்துறை போன்ற உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்களே இன்று கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor