காரைநகர் – சக்கலாவோடை மீன் சந்தையின் புதிய கட்டடம் திறப்பு

காரைநகர் – சக்கலாவோடை மீன் சந்தையின் புதிய கட்டடம் திறப்பு

காரைநகர் சக்கலாவோடை மீன் சந்தையானது இன்றையதினம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

சபையின் 32 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் குறித்த மீன் சந்தை திறந்து வைக்கப்பட்டது.

மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமாகி, கல்வெட்டு திரைநீக்கம் செய்யப்பட்டு, நாடா வெட்டப்பட்டு கட்டடம் திறந்து வைக்கப்பட்டது. பின்னர் சம்பிரதாய பூர்வமாக மீன் விற்பனை நடைபெற்றது.

இந்த மீன் சந்தையானது நாளையதினம் முழு வீச்சாக இயங்கும் என சபையின் தவிசாளர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சபையின் தவிசாளர் க.பாலச்சந்திரன் அவர்களது தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் உப தவிசாளர், சபையின் செயலாளர், உறுப்பினர்கள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Recommended For You

About the Author: webeditor