யாழ்ப்பாணம் சுன்னாகம் மயிலணி திருவருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன்வருடாந்த மஹோற்சவத்தை முன்னிட்டு சிறப்புச்சொற்பொழிவு

யாழ்ப்பாணம் சுன்னாகம் மயிலணி திருவருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ( வடலியம்மன்) திருக்கோவில் வருடாந்த மஹோற்சவத்தை முன்னிட்டு சிறப்புச்சொற்பொழிவு 27.01.2023 வெள்ளிக்கிழமை தொடக்கம் 04.02.2023 சனிக்கிழமை வரை காலை 11.00 மணிக்கு சமயஜோதி கதிர்காமன் நிஜலிங்கத்தின் ஒழுங்கமைப்பில் இடம்பெறவுள்ளது.

அந்தவகையில்
27.01.2023 வெள்ளிக்கிழமை நித்தியபாபுதரன் அவர்கள் ” ஆன்மீக எழுச்சியில் ஆலயங்கள் ” என்னும் விடயப்பொருளும் ,

28.01.2023 சனிக்கிழமை
சைவப்புலவர் ஏ. அனுசாந்தன் அவர்கள் ” பக்திவலையில் படுவோன் காண்க” என்னும் விடயப்பொருளும்,

29.01.2023 ஞாயிற்றுக்கிமை இளம்சைவப்புலவர் ச. நவநீதன் அவர்கள் ” ஆன்மீகமும் விஞ்ஞானமும் ” என்னும் விடயப்பொருளும்,30.01.2023 திங்கட்கிழமை சைவப்புலவர் செ. த. குமரன் அவர்கள் ” ஆலயங்களும் கலைகளும் ” என்னும் விடயப்பொருளும்,

31.01.2023 செவ்வாய்க்கிழமை சைவப்புலவர் பொன். சந்திரவேல் அவர்கள் ” சமூக நிறுவனங்களாக ஆலயங்கள் ” என்னும் விடயப்பொருளும், 01.02.2023 புதன்கிழமை
சைவப்புலவர் கந்த சத்தியதாசன் அவர்கள் ” தூயதை நாடிவரும் ஐஸ்வர்யலக்ஷ்மி ” என்னும் விடயப்பொருளும்,

02.02.2023 வியாழக்கிழமை
இளம்சைவப்புலவர் த. மனோஜ்குமார் அவர்கள் ” மார்க்கண்டேயருக்கு அருளிய தேவி மஹாத்மியத்தின் தோற்றமும் ” என்னும் விடயப்பொருளும், 03.02.2023 வெள்ளிக்கழமை
இளம்சைவப்புலவர் க. கைலவாசன் அவர்கள்
” கிரிகைகளும் வாழ்வும் ” என்னும் விடயப்பொருளும், 04.02.2023 வெள்ளிக்கிழமை சைவப்புலவர் சி. கா. கமலநாதன் அவர்கள் ” ஐந்தொழில்த்தத்துவம் ” என்னும் விடயப்பொருளில் ஆன்மீகவுரை ஆற்றவுள்ளார்கள்.

Recommended For You

About the Author: webeditor