யாழில் மாயமான குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!

யாழ்.பலாலி அன்ரனிபுரம் பகுதியிலிருந்து கடற்றொழிலுக்கு சென்ற மீனவர் காணாமபோனநிலையில் மாதகல் கடற்கரை பகுதியில் இன்று சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

இராயப்பு ரொபேட் கெனடி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மாதகல் கடற்கரையில் அவரது சடலம் கரையொதிங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த நபர் அன்ரனிபுரம் பகுதியில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை கடற்றொழிலுக்கு சென்ற நிலையில் காணமல் போயிருந்தார்.

காணாமல் போனவரை மறுநாள் திங்கட்கிழமை சக கடற்தொழிலாளர்கள் தேடி சென்ற சமயம் , உயிரிழந்தவரின் படகு கடலில் கவிழ்ந்த நிலையில் காணப்பட்ட நிலையில் மீனவர்கள் படகை மீட்டு கரை சேர்த்தனர்.

இந்நிலையில் மீட்கப்பட்ட சடலம் பிரதேச பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.

Recommended For You

About the Author: webeditor