யாழில் கருவாடு காயவைத்துக் கொண்டிருந்தவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த இராணுவ சிப்பாய்

யாழ்.காரைநகரில் கடற்றொழிலாளியின் கழுத்தில் கத்தியை வைத்து இராணுவ சிப்பாய் ஒருவர் கொலைஅச்சுறுத்தல் விடுத்ததாக முறையிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இன்று காலை காரைநகர் – சாம்பல் ஓடை பகுதியில் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.

கொலைஅச்சுறுத்தல்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடற்தொழிலாளி ஒருவர் கருவாடு உலர வைத்துக்கொண்டிருந்தவேளை அப்பகுதிக்கு வந்த இராணுவ சிப்பாய்ஒருவர் தொழிலாளியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி சென்றுள்ளார்.

சம்பவம் தொடர்பில் , காரைநகர் கடற்தொழிலாளர் சங்கத்திற்கும் , கிராமசேவையாளருக்கும் பாதிக்கப்பட்டவர் தெரியப்படுத்தியுள்ளார்.

குறித்த சம்பவத்தினை தாம் வன்மையாக கண்டிப்பதாகவும் , சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ய உள்ளதாகவும் காரைநகர் கடற்தொழிலாளர் சங்கத்தினர்தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor