நாரந்தனையில் நாலவர் குருபூஜையை முன்னிட்டுச் சிறப்புச்சொற்பொழிவு

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை நாரந்தனை வடக்கு பண்டாரபுலம் திருப்பதியில் கோவில் கொண்டு எழுந்தருளியிருக்கும் தான்தோன்றி ஸ்ரீ மனோன்மணி அம்பாள் கோவிலில் நாவலர் குருபூஜையை முன்னிட்டுச் சிறப்புச்சொற்பொழிவு ஆலயப் பிரதான மண்டபத்தில் 14.12.2022 புதன்கிழமை மாலை 4.00 மணிக்கு சமயஜோதி கதிர்காமன் நிஜலிங்கத்தின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்றது.

நாவலர் குருபூஜை நிகழ்வைத் தொடர்ந்து தலைமையுரையினைச் சிவகாந்தன் அவர்களும் , சிறப்புச்சொற்பொழிவினை இளம்சைவப்புலவர் ச.நவநீதன் அவர்கள் ” சைவத்தின் காவலர் நாவலர் ” என்னும் விடயப்பொருளில் சொற்பொழிவு நிகழ்வும் , சொற்பொழிவில் இருந்து மாணவர்களிடம் வினாக்கள் தொடுக்கப்பட்டுப் பாராட்டுப் பரிசில்கள் வழங்கப்பட்டது.

Recommended For You

About the Author: S.R.KARAN