யாழில் கிணற்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

கிணற்றில் இருந்து இன்று காலை ஆணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுடை பகுதியில் இடம் பெற்றுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் கட்டுடை பகுதியைச் சேர்ந்த ஆனந்தராஜா (வயது 43) என முதற் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: webeditor