மீண்டும் ஆரம்பமாக இருக்கும் யாழ் பலாலி சர்வதேச விமான நிலையத்தின் சேவைகள்

யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் சென்னைக்கான விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இது எதிர்வரும் 12ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

வாரத்திற்கு 04 விமான சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாச தெரிவித்துள்ளார்.

சென்னையிலிருந்து புறப்படும் விமானம் காலை 10.50 மணிக்கு பலாலி சர்வதேச விமான நிலையத்தை வந்தடைவதற்கும் பலாலி சர்வதேச விமான நிலையத்திலிருந்து காலை 11.50 மணிக்கு மீண்டும் சென்னை நோக்கிய விமான பயணத்தை ஆரம்பிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: webeditor