பொலிஸ் நிலையத்தில் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்ச்சியில் ஈடுபட்ட பெண்!

களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தருடன் நெருக்கமாக பழகியதாகவும், அவருடன் தன்னை இணைத்து வைக்குமாறும் கோரி 38 வயதான 4 பிள்ளைகளின் தாயார் கழுத்தை அறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்றையதினம் இந்த சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.

வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திலேயே குறித்த பெண் இவ்வாறு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இதனையடுத்து பிளேட்டினால் தனது கழுத்தை அறுத்த பெண், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்லதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் சம்பவத்தில் பெரியகல்லாறு பகுதியை சேர்ந்தன குடும்பப் பெண்ணொருவரே தனது கழுத்தை அறுத்துக்கொண்டதாக கூறப்படுகின்றது.

Recommended For You

About the Author: webeditor