தாய் தந்தையரை கொன்று சமைத்து சாப்பிட்ட மகன்

தமிழகத்தின் கும்பகோணம் அருகே தாய், மற்றும் தந்தையை கொலை செய்து உடலை சமைத்து சாப்பிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கும்பகோணம் அருகே திலயம்பூர் பகுதியில் லட்சுமி – கோவிந்தராஜ் தம்பதி. இவர்களுக்கு ராஜேந்திரன் என்ற ஒரு மகன் உள்ளார். ராஜேந்திரன் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளவராக இருந்துள்ளார்.

தாய் மற்றும் தந்தை இருவரும் கொலை
இந்த நிலையில் தாய் மற்றும் தந்தை இருவரையும் கொலை செய்த மகன் அவர்களது உடல்களை வீட்டில் வைத்துக் கொண்டு சமைத்து சாப்பிட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில், அவ்வழியாக சென்ற பொதுமக்களுக்கு துர்நாற்றம் வீசியதை அடுத்து சந்தேகம் அடைந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதையடுத்து அங்கு வந்த பொலிசார் வீட்டின் உட்புறம் சென்று பார்த்த போது ராஜேந்திரன் உள்ளே இருந்துள்ளார்.

அத்துடன் ரத்த கரை படிந்த கத்தியும் இருந்துள்ள நிலையில் , அவர் பெற்றோரை கொலை செய்தமை தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் ராஜேந்திரனை கைது செய்த பொலிசார் மோப்ப நாய் உதவியுடன் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றதாக கூறப்படுகின்றது.

Recommended For You

About the Author: webeditor