நீர்வேலியில் சிறப்புச் சொற்பொழிவு

யாழ்ப்பாணம் நீர்வேலி அருள்மிகு கந்தசுவாமி தேவஸ்தானம் நடத்தும் வாராந்தச் சிறப்புச் சொற்பொழிவு ஆலய சண்முக விலாச மண்டபத்தில் எதிர்வரும் 02.12.2022 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு சமயஜோதி கதிர்காமன் நிஜலிங்கத்தின் ஒழுங்கமைப்பில் இடம்பெறவுள்ளது.

இதில் ஆலயத்தின் பிரதம குருக்கள் சிவஸ்ரீ இராஜேந்திர சுவாமிநாதக்குருக்களின் ஆசியுரையினைத் தொடர்ந்து பரிபாலன சபைத் தலைவர் த.சோதிலிங்கம் அவர்கள் தலைமையுரை ஆற்றுவார்.

சிவநெறிச்செம்மல் க.ஈஸ்வரன் அவர்கள் ‘ இந்துக்கள் வாழ்வில் கிரிகைகளின் முக்கியத்துவம் ‘ என்னும் விடயப்பொருளில் சிறப்புச்சொற்பொழிவு ஆற்றவுள்ளார்.

Recommended For You

About the Author: S.R.KARAN