கியூபாவில் நிற்கும் ரஷ்யாப் போர்க் கப்பல்கள்

அமெரிக்காவுக்கு அருகே கரீபியனில் திட்டமிட்ட கடற்படைப் பயிற்சிகளுக்காக ரஷ்யாவின் போர்க் கப்பல்களின் ஒரு பகுதி கீயூபாவை வந்தடைந்ததுள்ளன. உக்ரேனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ்வை பாதுகாப்பதற்காக ரஷ்யாவிற்குள் தாக்குதல் நடத்துவதற்கு உக்ரேனில் அமெரிக்கா அனுப்பிய ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு ஜனாதிபதி ஜோ பிடன் அங்கீகாரம் அளித்த... Read more »

இலங்கை தேர்தல் களம் வடக்கிற்கு படையெடுக்கும் தென்னிலங்கை அரசியல்வாதிகள்

வடக்கு கிழக்கில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் விவகாரம் நீடித்து செல்லும் நிலையில் அதற்கு தீர்வு என்ன என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்கவிடம் சைவ சமயத் தலைவர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர். இதற்கு பதிலளித்த அனுரகுமார, தனது சகோதரியும் காணமலாக்கப்பட்டவர் தான் ஆகவே... Read more »
Ad Widget Ad Widget

தமிழ் பொது வேட்பாளருக்கே ஆதரவு: சித்தார்த்தன்

தமிழ் மக்களுக்கான அதிகாரப் பரவலாக்கல் தொடர்பாக தெளிவான நிலைப்பாட்டினை தமிழ் மக்களுக்கு, ஜே.வி.பி அறிவிக்க வேண்டும் என தர்மலிங்கம் சித்தார்த்தன் வலியுறுத்தியுள்ளார். அத்துடன், வடக்கு, கிழக்கை நீதிமன்றத்தினூடாக தனித்தனி மாகாணங்களாக பிரிப்பதற்கு பிரதான பங்காளியாக ஜே.வி.பி கட்சி செயற்பட்ட விடயத்தில், தமிழ் மக்கள் இன்று... Read more »

இரத்து செய்யப்பட்டது தபால் ஊழியர்களின் விடுமுறை: அஞ்சல்மா அதிபர்

தபால் சேவையில் 6,000ற்கும் மேற்பட்ட ஊழியர் வெற்றிடங்களை நிரப்பத் தவறியதால் தபால் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர். இந்நிலையில், மறு அறிவித்தல் வரை தபால் ஊழியர்களின் விடுமுறை இரத்துச் செய்யப்படுவதாக அஞ்சல்மா அதிபர் அறிவித்துள்ளார். தபால் ஊழியர்கள் இன்று இரவு பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ள நிலையில், இவ்வாறு... Read more »

13 ஐ அமுல்படுத்தல் – வட்டமேசை மாநாட்டைக் கூட்டுக: கரு கோரிக்கை

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுலாக்குவது குறித்து அரசியல் தலைவர்களும், புலம்பெயர் தமிழர்களும் நேர்மறையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள நிலையில் தாமதமின்றி வட்டமேசை மாநாட்டைக் கூட்டி தீர்வை எட்டுமாறு சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய கோரிக்கை விடுத்துள்ளார்.... Read more »

சந்திரிகா, மஹிந்த, மைத்திரி, கோட்டா ராஜ வாழ்க்கை: அம்பலப்படுத்திய ஜே.வி.பி

முன்னாள் ஜனாதிபதிகளின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் விளக்கமளித்துள்ளார். கொழும்பில் இன்று புதன்கிழமை (12.06.24) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு விளக்கமளித்துள்ளார். அவர்களுக்கான கொடுப்பனவுகள் குறித்து தெளிவுப்படுத்திய விஜித ஹேரத், மக்களின்... Read more »

சஜித் – ரணில் ஒரே சின்னத்தில் போட்டி

ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான கூட்டணியை வீழ்த்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி கடும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது. சஜித் தரப்பில் இருந்து முக்கிய தலைவர்களை தம்பக்கம் வளைக்கும் முயற்சிகளில் ரணில் ஈடுபட்டுள்ளார். அதுதொடர்பில் கடந்த... Read more »

முன்னாள் சுங்க அதிகாரி கந்தையா யோகநாதன் விடுதலை

விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் ஒருவருக்கு உதவியதாக தெரிவித்து பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியிருந்த முன்னாள் சுங்க அதிகாரி கந்தையா யோகநாதன் விடுதலை செய்யப்பட்டுள்ளார். விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் உறுப்பினரான கதிர்காமநாதன் மகிந்தன் அல்லது வெண்ணயனன் என்பவருக்கு உதவியதாகத் தெரிவித்து... Read more »

சீன கடலட்டைகள்’: ஜெனிவாவில் சிறீதரன் கூறியதென்ன?

சீனா மூலம் வடக்கு கடற்பரப்பில் கடலட்டை திட்டங்களை நடைமுறைப்படுத்துவது பொருளாதார ரீதியில் நன்மையாக இருந்தாலும் குறித்த வேலைத்திட்டங்கள் மூலம் வடக்கின் மீன்பிடித் துறைக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஜெனிவாவில் தெரிவித்தார். ஜெனிவா நகரில் இடம்பெற்று... Read more »

குவைத் தீவிபத்து: பலி எண்ணிக்கை 41ஆக உயர்வு

தெற்கு குவைத்தில் உள்ள மங்காப் நகரில் புலம்பெயர் தொழிலாளர்கள் வசிக்கும் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41ஆக அதிகரித்துள்ளது. உள்ளூர் நேரப்படி காலை 6:00 மணிக்கு (0300 GMT) இந்த சம்பவம் குறித்து அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. “தீ விபத்து ஏற்பட்ட... Read more »