உலக கோப்பை தொடரில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தின் போது இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனை கொண்டாடும் விதமாக முகமது சமி தரையில் அமர்ந்து கால்களை நீட்டி பிரார்த்தனை செய்ய சென்றதாகவும், ஆனால் பின்னர் அதனை சுதாரித்து... Read more »
நடிகர் ரஜினிகாந்த் ஆளுநர் மற்றும் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “எனக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்த மதிப்பிற்குரிய ஆளுநர் திரு.ரவி அவர்களுக்கும், இனிய நண்பர் தமிழக முதலமைச்சர் மாண்புமிகு திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.... Read more »
குழந்தைகளின் இசை திறமையை உலகளவில் அறிய வைக்கும் நிகழ்ச்சியாக சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் மக்கள் மத்தியில் மிகப்பெரிய இடத்தை பெற்றுள்ளது. சரிகமப சீசன் 3 நிகழ்ச்சி 28 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்டது. ஸ்ரீனிவாஸ், விஜய் பிரகாஷ், சைந்தவி மற்றும் அபிராமி ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று வரும்... Read more »
தென்னிந்திய தமிழ் நடிகை ரம்பா யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து தனது குடும்பத்துடன் மானிப்பாய் மருதடி பிள்ளையார் கோயிலில் விசேட வழிபாடுகளில் ஈடுபட்டார். நடிகை ரம்பாவின் கணவர் இந்திரகுமார் பத்மநாதன் யாழ்ப்பாணம் மானிப்பாயை பூர்வீகமாக கொண்ட கனடா முதலீட்டாளராவார். இவரின் முயற்சியாக யாழ்ப்பாணத்தில் நொதேர்ன் யுனி... Read more »
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 6 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஒரு படகும் கைப்பற்றப்பட்டது. யாழ்ப்பாணம் – காரைநகர் கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே நேற்று மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களை காங்கேசன்துறை கடற்படை... Read more »
இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சி ஆலோசகராக பணியாற்றும் மஹேல ஜயவர்தன தொடர்ந்தும் அந்த பதவியில் பணியாற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக மஹேல ஜயவர்தன, கிரிக்கெட் சபையின் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். அண்மையில் இந்தியாவில் நடைபெற்ற உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை அணி சந்தித்த... Read more »
மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை நவம்பர் 16ஆம் திகதி திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்கோவிலுக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் சபரிமலையில் திரண்டதால், அவர்கள் வழிபாட்டுக்காகப் பல மணி நேரம் வரிசையில் காத்திருக்கும்... Read more »
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் பயணித்த வாகனத்தையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கிளிநொச்சி பகுதியில் இருந்து கேரளா கஞ்சாவை கடத்தி வருவதாக இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலிற்கமைய சாவகச்சேரியில் பொலிஸாருடன் இராணுவ... Read more »
மலேசியாவில் மோசமான நிலையில் வாழும் வெளிநாட்டு தொழிலாளர்கள் மலேசிய அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளனர். ஈப்போ, மாஞ்சுங் மற்றும் தாபா ஆகிய இடங்களில் உள்ள மூன்று தனித்தனி சோதனைகளில் வேலையின்றி கைவிடப்பட்ட நிலையில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 86 வெளிநாட்டு தொழிலாளர்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர். இந்நடவடிக்கை நாட்டில் உள்ள வெளிநாட்டுத்... Read more »
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு பிடித்த பிரபல செய்தித்தாளான Komsomolskaya Pravdaவின் 35 வயதான துணை ஆசிரியர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில் நடந்த தொடர் மர்ம மரணங்களை நினைவுபடுத்தும் இந்த சம்பவம் அதிகாரிகளையும், பொதுமக்களையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி... Read more »