திருகோணமலையின் பிரதேசமொன்றில் காணிப்பிரச்சனை காரணமாக இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இச்சம்பவம் இன்று (29-01-2023) பிற்பகல் திருகோணமலை – புல்மோட்டை பகுதியில் இடம்பெற்றுள்ளது. புல்மோட்டை பம்ஹவுஸ் விவசாயக் காணிக்குள் எல்லைப் பிரச்சினை காரணமாக இரு குழுக்களுக்கிடையில்... Read more »
புத்துணர்ச்சியுடன் புதிய வருடம் ஒன்று பிறக்கின்றது. புதிய சிந்தனைகள், திடமான நோக்கு என்பவற்றுடன் எண்ணங்களைப் புதுப்பித்துக் கொள்ள இதுவொரு சிறந்த சந்தர்ப்பமாகும். எண்ணிலடங்கா சிரமங்கள், நிச்சயமற்ற சூழ்நிலைகள், ஏமாற்றங்களுடனான ஒரு வருடத்தை முடித்துக்கொண்டு, நாம் 2023 எனும் புதிய ஆண்டுக்குள் காலடி எடுத்து வைக்கின்றோம்.... Read more »
திருகோணமலை ரொட்டவெவ பகுதியில் சஜித் பிரேமதாசவினால் மானிய அடிப்படையில் கட்டிக்கொடுத்த வீட்டுக்குள் கஞ்சா செடியை வளர்த்த சந்தேக நபரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மொரவெவ பொலிஸாருக்கு நேற்று முன்தினம்(30) கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து குறித்த சந்தேகநபரின் வீட்டை சோதனையிட்ட போது வீட்டிற்குள் 05 கஞ்சா... Read more »
திருகோணமலை, புல்மோட்டை பிரதான வீதி , கும்புறுப்பிட்டிப் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் பெண் தாதி ஒருவர் பலியாகியுள்ளளார். அத்துடன், இந்த விபத்தில் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். சம்பவத்தில் நிலாவெளி பகுதியைச் சேர்ந்த குச்சவெளி வைத்தியசாலையில் கடமையாற்றி வரும் கீதாஞ்சனா தேவி (வயது 44)... Read more »
கொழும்பில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த புகையிரதம் மோதி இன்று (28) காலை பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். திருகோணமலை, பூம்புகார் வீதியில் வசிக்கும் நான்கு பிள்ளைகளின் தாயான மேரி சாந்தி (வயது 47) என்பவரே உயிரிழந்துள்ளார். இதேவேளை, உயிரிழந்த பெண்ணின் சடலம் திருகோணமலை பொது... Read more »
திருகோணமலையில் அமைந்துள்ள 11 பிரதேச செயலக பிரிவுகளின் கிராம சேவகர் பிரிவின் எண்ணிக்கையினையும், சனத்தொகையின் எண்ணிக்கையினையும் குறிப்பிட்டு திருகோணமலை மற்றும் கிண்ணியா பிரதேச செயலக பிரிவுகளில் தலா ஒரு நகர சபையும், ஒரு பிரதேச சபையும் காணப்படுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப்... Read more »
திருகோணமலையில் உள்ள கந்தளாய் குளத்தின் மூங்கில் ஆற்றினை கடக்க முற்பட்ட போது நீரில் மூழ்கி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்றைய தினம் (10-11-2022) இடம்பெற்றுள்ளது. வான்எல பகுதியைச் சேர்ந்த சுபைதீன் ரமீஸ் என்ற 28... Read more »
கிணற்றுக்குள் வீழ்ந்து 15 வயதுடைய மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தாவல் வெளியாகி உள்ளது. இச் சம்பவம் திருகோணமலை கிண்ணியா பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது. பாடசாலையின் விடுதியில் தங்கியிருந்து கல்வி கற்றுவந்த குறித்த மாணவர் விடுதிக்கு அருகிலிருந்த கிணற்றுக்குள் வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.... Read more »
திருகோணமலை- கிழக்கு மாகாண கல்வித்திணைக்களத்தின் முன்பாக இன்று (02) காலை ஆசிரியர்கள் கண்டனப் பேரணி ஒன்றை முன்னெடுத்தனர். வெளிவலயத்தில் கடமையாற்றும் ஐந்து தொடக்கம் எட்டு வருட ஆசிரிய சேவையினை பூர்த்தி செய்தும் இன்றுவரைக்கும் ஒரே பாடசாலையில், தூரப்பிரதேசத்தில் இருந்து பல்வேறு பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும்... Read more »
திருகோணமலையில் கிண்ணியா தள வைத்தியசாலையில் முதல் முறையாக ஐந்து மணித்தியாலங்கள் சத்திர சிகிச்சை மேற்கொண்டு சாதனை படைக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. கிண்ணியா பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடைய பெண்ணொருவருக்கே இவ்வாறு சிகிச்சை மேற் கொள்ளப்பட்டதாக கூறப்படுகின்றது. இவருக்கு உணவுக் கால்வாயில் ஏற்பட்ட சுகவீனம் காரணமாக... Read more »

