ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தார் செல்வம் எம். பி.

வடக்கு கிழக்கில்,  மாவீரர் நினைவேந்தல் தடையின்றி இடம் பெற  வழி செய்த  ஜனாதிபதி அனுர குமாரவிற்கு, நன்றி தெரிவித்துள்ளார் செல்வம்  அடைக்கலநாதன் எம்.பி. மக்களின் மனதில் இருக்கும்  வலி சுமந்த நாளை அஞ்சலி செய்து  நினைவு கூற ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மற்றும் அரசாங்கம்... Read more »

வரலாற்றில் முதல் முறையாக எமது அரசாங்கமே இவ்வளவு வேகமான நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது- பிரதியமைச்சர் உபாலி சமரசிங்க.(video)

மன்னாரில் சீரற்ற காலநிலையால் பாதிக்கப் பட்ட மக்களுக்கான நிதித் தேவையை, வரலாற்றில் முதன் முறையாக, துரித கதியில் எமது அரசாங்கமே  பூர்த்தி செய்துள்ளதென கூட்டுறவுப் பிரதியமைச்சரும், வன்னி மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவருமான உபாலி சமரசிங்க தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் (28.11) வியாழன்,  மன்னார் மாவட்டச்... Read more »
Ad Widget

சீரற்ற காலநிலை தொடர்பில் ஆராய. விஷேட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்.

மன்னார் மாவட்டத்தில்  கடந்த சில நாட்களாக ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால், ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும்  ஆராய்வதற்கான விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று (28.11) வியாழன் மாலை மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது. மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் ஏற்பாட்டில் கூட்டுறவு பிரதி... Read more »

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்டார் பிரதி பாதுகாப்பு அமைச்சர்.(video)

மன்னார் மாவட்டத்தில் சீரற்ற கால நிலையால் பாதிக்கப்பட்டு நலன்புரிநிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களைப் பிரதி பாதுகாப்பு அமைச்சர்அருண ஜெயசேகர இன்றைய தினம்  (27.11)நேரில் சென்று பார்வையிட்டார். மன்னார் மாவட்டச் செயலகத்தில் அணைத்து திணைக்கள அதிகாரிகளுடனும்  இடம்பெற்ற அவசர கலந்துரையாடலின் பின்னர், அமைச்சர், மன்னாரில் உள்ள நலன்புரி... Read more »

பிரதி பாதுகாப்பு அமைச்சர் மன்னார் விஜயம்.(video)

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலை காரணமாக நாடு முழுவதும் பதிப்புக்குள்ளான நிலையில்,மன்னார் மாவட்டமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று புதன்கிழமை (27.11)காலை பிரதிப்  பாதுகாப்பு அமைச்சர் அருண ஜெயசேகர தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றது. இதன்... Read more »

வைத்தியசாலைச் சமூகத்தின்,அமைதிவழிக் கவனயீர்ப்புப் போராட்டம்.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின்,வைத்தியர்கள் ஊழியர்கள், சுகாதார பணியாளர்கள் இணைந்து இன்றைய தினம்(26.11) மதியம் 1 மணியளவில் வைத்திய சாலைக்கு முன்பாக, அடையாள, கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை அமைதியான முறையில் முன்னெடுத்தனர். கொட்டும் மழையில் முன்னெடுக்கப் பட்ட,குறித்த போராட்டமானது,வைத்திய சேவைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில்... Read more »

தொடரும் கன மழையினால் அதிகரிக்கும் பாதிப்புகள். 5088 ஹெக்ரர் பயிர் செய்கை முற்றாக அழிவு.

நான்கு நாட்களாகப்  பெய்து வரும் தொடர் கன மழையினால் மன்னார் மாவட்டத்தில், 5088 ஹெக்ரர் பயிர் செய்கை முற்றாக அழிவுற்றுள்ளதாக, மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்றையதினம் (26.11) செவ்வாய்க்கிழமை, மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார், இது... Read more »

சாரல் மழையுடன் பலத்த காற்று.வானிலை ஆய்வு மையத்தின் சிவப்பு அறிவிப்பு!

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (26) அதிகாலை 05.30 மணியளவில் 200 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யும் என சிவப்பு அறிவிப்புடன் விஞ்ஞான கணிப்பு ஒன்றை விடுத்துள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் சில இடங்களில்... Read more »

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட்டார் ரிசார்ட் எம்.பி. (Video)

மழை வெள்ளத்தினால் முகாம்களில். தங்க வைக்கப்பட்டிருக்கும் மக்களை இன்றைய தினம் நேரில் சென்று பார்வையிட்ட, ரிஷார்ட் எம்பி, பாதிக்கப்பட்ட மக்களுக்குக்கு அவர்களுக்கான வசதிகளை செய்து கொடுக்குமாறு. மன்னார்,அரசாங்க அதிபர், க. கனகேஸ்வரனிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று (25.11) திங்கள்,பிற்பகல் மன்னார் மாவட்டச் செயலகத்தில் அரச... Read more »

மன்னார் மாவட்டத்தில் குறைந்த தாழமுக்கம் காரணமாக ஏற்படவுள்ள அனர்த்தத்தை தடுக்க முப்படையினர் தயார் நிலையில்-

மன்னார் மாவட்டத்தில் குறைந்த தாழமுக்கம் காரணமாக ஏற்படவுள்ள அனர்த்தத்தை தடுக்க முப்படையினர் ,பொலிஸார் மற்றும் திணைக்கள அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளதாகவும்,மன்னார் மாவட்டத்தில் இருந்து மீனவர்களை மறு அறிவித்தல் வரை கடற் தொழிலுக்குச் செல்ல வேண்டாம் எனவும்,மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்,க.கனகேஸ்வரன் தெரிவித்துள்ளார். இது... Read more »