மன்னார் மாவட்டத்தில் அருவியாற்றினை அண்டிய கிராமங்களில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்வதற்கு தயாராக இருக்குமாறு, மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்னிலங்கைப் பகுதியில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக முக்கியமான பெரிய குளங்களின் வான் கதவுகள்... Read more »
மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோட்டக்காடு புகையிரத கடவையின் அருகில் இளம் பெண் ஒருவரின் சடலம் இன்று(20.01)திங்கள் காலை அடையாளம் காணப்பட்டுள்ளது. இன்று (20) அதிகாலை 4.30 மணியளவில் தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் குறித்த பெண் மோதி உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.... Read more »
மன்னார் நீதிமன்றத்திற்கு முன் கடந்த வியாழன் (16) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவத்தில் பணியாற்றும் சிப்பாய் ஒருவர் உள்ளடங்களாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இராணுவத்தில் பணியாற்றும் சிப்பாய் மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி நடுக்குடா கடற்கரை பகுதியில்... Read more »
மன்னார் நீதிமன்றத்திற்கு முன்னால் இன்றைய தினம்(16.01) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன்,மேலும் இருவர் படுகாயமடைந்துள்ள இச்சம்பவத்திற்கு மன்னார் பொலிஸார் முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், மன்னார்... Read more »
மன்னார் நீதவான் நீதி மன்றத்துக்கு முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி-இருவர் படுகாயம். மன்னார் நீதவான் நீதி மன்றத்துக்கு முன்பாக இன்றைய தினம்(16.01) வியாழக்கிழமை காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்ததுடன்,மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். வழக்கொன்றுக்காக நீதிமன்றத்திற்கு வருகை தந்தவர்களை இலக்கு... Read more »
அனுராதபுரம் மற்றும் மன்னார் பகுதிகளில் புத்தசாசனத்திற்காக செய்த சேவைகளுக்காக, கலாநிதி, தேசபந்து, தேச அபிமானி, சேவா கீர்த்தி, போன்ற தேசிய கௌரவ சன்மானங்கள், மன்னார், உயிலங்குளம் 542,பாதுகாப்புப் படைப்பிரிவினைச் சேர்ந்த மேஜர். M.விக்ரர் பெர்ணான்டோவிற்கு, பெருமை மிக்க மகா பரிசுத்த , மகா சங்க... Read more »
மடு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குஞ்சுக்குளம் பிரதேசத்தில் மல்வத்து ஓயாவில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் கடந்த திங்கட்கிழமை (13) மாலை நீரில் மூழ்கி காணாமல் போயுள்ள நிலையில் குறித்த இளைஞரை தேடும் நடவடிக்கை தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. பொலிஸார் மற்றும் அப்பிரதேச மக்கள் இணைந்து... Read more »
இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (14.01) உலகத் தமிழர்களால் தைப் பொங்கல் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், மன்னார் மாவட்டத்திலும், கொட்டும் மழையின் மத்தியில், மக்கள் தைப்பொங்கல் பண்டிகையை மிகவும் சிறப்பாக கொண்டாடியுள்ளனர். குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் உள்ள இந்து ஆலயங்களில் விசேட... Read more »
வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொள்வதற்காக, மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோவை எதிர்வரும் 15 ஆம் திகதி கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வருமாறு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை(12) அவரது அலுவலகத்தில் வைத்து கடிதம் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது. கடந்த 09 ஆம்... Read more »
இலங்கையில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணை குழுவினால்அங்கீகரிக்கப்பட்ட. பல்கலைக்கழகங்களில் பட்டத்தினைப் பெற்றுக்கொண்டால், இலங்கையில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும்,வேலைவாய்ப்பினைப் பெற்றுக்கொள்ளலாம் என I D M Nation Campus நிறுவனத்தின் வட பிராந்திய இயக்குநர் அன்ரூ அனஸ்லி தெரிவித்துள்ளார். உலகளாவிய ரீதியிலான தொழில் போக்கு தொடர்பான தொழில் வழிகாட்டல்செயலமர்வு... Read more »

