யாழ் போதனா வைத்தியசாலையில் இலவச கண் சத்திரசிகிச்சை!

யாழ் போதனா வைத்தியசாலையில் கண்புரை சத்திரசிகிச்சையினை முற்றிலும் இலவசமாக மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. யாழ் போதனா வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைகள் கண்சத்திர சிகிச்சை நிபுணர் வைத்திய கலாநிதி மலரவன் குழுவினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சத்திரசிகிச்சை திட்டமானது ஐக்கிய இராச்சியத்தின் Assist RR நிறுவனத்தினால் ஒருங்கிணைக்கப்படுவதுடன் சத்திர... Read more »

யாழில் பறிபோகும் நிலையில் பிரபல முருகன் ஆலயம்!

யாழ்ப்பாணம் சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்தில் உள்ள நூற்றாண்டு பழமைவாய்ந்த அரச மரம் சங்கமித்தையுடன் தொடர்புடைய அரச மரம் என வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த அரச மரம் தொல்பொருள் சின்னமாக அறிவித்து வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதால், எதிர்காலத்தில் அரச மரத்தை தொல்பொருள் திணைக்களத்தினர்... Read more »
Ad Widget

வல்வைப் படுகொலைகளின் 34 -ம் ஆண்டு நினைவேந்தல்

யாழ். வல்வைப் படுகொலைகளின் 34 -ம் ஆண்டு நினைவேந்தல் இன்று! 1989 ம் ஆண்டு ஓகஸ்ட் 2ம் திகதி வல்வெட்டித்துறை , அதனை அண்டிய பகுதிகளில் இந்திய இராணுவத்தால் 63 தமிழ் பொதுமக்கள் சுட்டும், வெட்டியும், எரித்தும் கொல்லப்பட்டனர். Read more »

போயா தினத்தன்றும் கூடிக் கூக்குரலிடுவதனால் தையிட்டிக்கு தீர்வு கிடைக்காது! EPDP

போயா தினத்தன்றும் கூடிக் கூக்குரலிடுவதனால் தையிட்டிக்கு தீர்வு கிடைக்காது – ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டு! தையிட்டி விவாரை விவகாரதுக்கு ஒவ்வொரு போயா தினத்தன்றும் கூடிக் கூக்குரலிடுவதனால் எந்தவிதமானக தீர்வும் கடைக்கப்போவதில்லை என சுட்டிக்காட்டியுள்ள ஈழ மக்கள்... Read more »

வடமாகாணத்தில் இரண்டாவது தென்னை முக்கோணம்

செப்டம்பர் 02 ஆம் திகதி கொண்டாடப்படும் உலக தென்னை தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் முல்லைத்தீவை மையமாக கொண்டு வடமாகாணத்தில் இரண்டாவது தென்னை முக்கோணத்தை ஆரம்பிக்க இருப்பதாக பெருந்தோட்ட மற்றும் கைத்தொழில் அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன ஜனாதிபதி... Read more »

சஜித் கூட்டணிக்கே தலைவர் எனக்கு அல்ல ; மனோ கணேசன்

பொதுஜன பெரமுனவை பிரிக்கும் வேலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கனகச்சிதமாக ஈடுபட்டு கொண்டு இருக்கின்றார் என தெரிவித்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் அடுத்துவரும் நாட்களில் வர்ணமயமான காட்சிகளை எதிர்பார்க்கலாம் என்றார். யாழ்ப்பாணத்தில் இன்று காலை ஊடகங்களின் கேள்விக்கு... Read more »

புத்தரோடு யாழ். பல்கலையினுள் புகுந்த மர்ம வாகனம்! புத்தர் சிலை வைப்பதை எதிர்த்த தமிழ் மாணவர்களுக்கு விசாரணை!

புத்தரோடு யாழ். பல்கலையினுள் புகுந்த மர்ம வாகனம்! புத்தர் சிலை வைப்பதை எதிர்த்த தமிழ் மாணவர்களுக்கு விசாரணை! நேற்றையதினம் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில், போயா தினத்தை முன்னிட்டு பௌத்த கொடிகள் கட்டி, புத்தர் சிலை வைத்து வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன. பௌத்த கொடிகள் பல்கலையினுள் கட்டிக்கொண்டிருந்தபோது அதனை... Read more »

யாழில் வீட்டை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டவர் கைது!

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சில தினங்களுக்கு முன் வீடொன்றை உடைத்து தங்க நகைகளை திருடிய நபரொருவர் நேற்றையதினம் செவ்வாய்க்கிழமை (01) கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 30ஆம் திகதி யாழ். நகர்ப் பகுதியை அண்டிய வீடொன்றினை உடைத்து, வீட்டில் இருந்த சுமார் 2 இலட்சத்து... Read more »

யாழில் யாசகம் பெற்று வந்த நபர் சடலமாக மீட்பு!

கொக்குவில் இந்துக் கல்லூரிக்கு அருகாமையில் உள்ள திறந்த அறை ஒன்றில் இருந்து முதியவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் சொந்த வீடு இன்றி நீண்ட காலமாக யாசகம் பெற்று வந்த நிலையில் நேற்று இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மரண விசாரணைகளை மேற்கொண்ட... Read more »

யாழில் மர்ம பொருட்களுடன் நபர் ஒருவர் கைது!

யாழ்ப்பானத்தில் உள்ள பகுதியொன்றில் கசிப்பு காய்ச்சுவதற்கு தயாராக இருந்தவேளை, கசிப்பு காய்ச்சும் உபகரணங்கள் மற்றும் 40 லீற்றர் கோடா என்பவற்றுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இளவாலை – உயரப்புலம் பகுதியில் இன்றைய தினம் இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. மேலும், குறித்த கைது... Read more »