யாழ்ப்பாணத்தில் வாள் ஒன்றுடன் இளைஞன் ஒருவர் கைது!

யாழ்ப்பாணத்தில் வாள் ஒன்றுடன் இளைஞன் ஒருவர் நேற்றைய தினம் சனிக்கிழமை (07) கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் , காரைநகர் ஊரி பகுதியை சேரந்த இளைஞன் வாள் ஒன்றை வைத்திருப்பதாக ஊர்காவற்துறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், பொலிஸார் இளைஞனின் வீட்டை முற்றுகையிட்டு தேடுதல் நடத்தினர்.... Read more »

யாழ் முக்கிய வீதி ஒன்றில் குப்பை போடுபவர்களின் காணொளியை அம்பலப்படுத்த தயராகும் இளையவர்கள்!

யாழ் பிறவுண் வீதி, கலட்டிச் சந்தியை அண்மித்த, மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள புளியடிப் பகுதியில் அத்துமீறிக் குப்பைகளைக் கொட்டுவோர்களை அந்தப் பகுதியில் வதியும் இளையவர்கள் காணொளி எடுத்து சமூக வலைத் தளங்களில் ஆதாரங்களுடன் வெளியிடத் தயாராகி வருகின்றனர். யாழ் பல்கலைக்கழக மாணவர் விடுதிகள், யாழ்... Read more »
Ad Widget

இந்திய தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு நாள் நிகழ்வு

இந்திய தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு நாள் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்றது. இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண நகரிலுள்ள விருந்தினர் விடுதியொன்றில் இன்று சனிக்கிழமை நடைபெற்றது. இந் நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் பி.எச்.எம்.சாள்ஸ் பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருந்தார். நிகழ்வில்... Read more »

வீதி அபிவிருத்தி அதிகாரசபையினரிடம் மக்கள் விடுத்துள்ள கோரிக்கை

சாவகச்சேரி – பருத்தித்துறை இணைப்பு வீதி (தபாற்கந்தோர் வீதி) புனரமைப்புப் பணியின்போது நீர் வடிந்தோடுவதற்கான ஏற்பாடுகளையும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினர் மேற் கொள்ள வேண்டும் என சாவகச்சேரி கெருடாவில் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக அம் மக்கள் கருத்துத் தெரிவிக்கையில், சாவகச்சேரி –... Read more »

யாழில் பாதுகாப்பு உத்தியோகத்தரை கட்டிப் போட்டு கொள்ளை!

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை பகுதியில் பாதுகாப்பு உத்தியோகத்தரை கட்டிப் போட்டுவிட்டு இரும்பு திருடியவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். காங்கேசன்துறை பகுதியில் நேற்றிரவு (07.10.2023) குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் கடமையில் இருந்த பாதுகாப்பு உத்தியோகத்தரை கட்டிப் போட்டு விட்டு காங்கேசன்துறை... Read more »

யாழில் வெளிநாட்டு சிகரட்டுடன் நபர் ஒருவர் கைது!

இளவாலை பகுதியில் வெளிநாட்டு சிகரெட்டுக்களை வைத்திருந்த 33 வயதுடைய ஆணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனிப்புலம் அம்மன் கோவில் பகுதியில் வைத்து நேற்றையதினம் (06) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதன்போது அவரிடமிருந்து 28 சிகரெட் பெட்டிகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது... Read more »

மூன்று தசாப்தங்களின் பின்னர் தமது காணிகளில் வேலி அமைக்கும் மக்கள்

3 தசாப்தங்களுக்கு பின்னர் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை, மாங்கொல்லை பகுதியில் இராணுவத்தினர் வெளியேறிய பிரதேசங்களில் உள்ள தமது காணிகளை அறிக்கைப்படுத்தும் நடவடிக்கைகளில் காணி உரிமையாளர்கள் ஈடுபட்டுள்ளனர். கடந்த 33 வருடங்களாக மாங்கொல்லை பகுதி இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக இராணுவ கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. இந்நிலையில் கடந்த... Read more »

“கனவுகளும் நனவாகும்” நாகப்பட்டினத்திலிருந்து இலங்கைக்கு 10 ஆம் திகதி முதல் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை

மறவன்புலவு க. சச்சிதானந்தன் எழுதுகிறேன் கனவுகளும் நனவாகும் 2009 முதலாக காங்கேயன்துறையில் இருந்து நாகப்பட்டினத்திற்கு கப்பல் சேவை வேண்டுமென முயன்று வந்தேன். 2010இல் யாழ்ப்பாணத்தில் நுணாவிலில் என்னைச் சந்திக்க வந்த மாண்புமிகு அமைச்சர் தேவானந்தாவுக்கு இத்திட்ட அறிக்கையைக் கொடுத்தேன். அன்றைய பாதுகாப்புச் சூழலை அவர்... Read more »

விக்னேஸ்வரனுக்கு சட்டம் தெரியாது! சுகாஷ்

#விக்னேஷ்வரன் அவர்களுக்கு! எனக்கு உங்களளவுக்குச் சட்டத்துறையில் அனுபவம் இல்லாவிட்டாலும், எனது 12 வருடக் குறுகிய அனுபவத்தில், 1) #குருந்தூர் மலை வழக்கில் வழங்கப்பட்டது “தீர்ப்பு” (Judgement) அல்ல “கட்டளை”யே (Order) ஆகும். 2) நீதிபதியொருவர் தன்னால் வழங்கப்பட்ட தீர்ப்பையோ அல்லது கட்டளையையோ “#கைபிறழ்பாடானது” (Per... Read more »

நிரந்தர அரசியல் தீர்வை நோக்கி தமிழர் தரப்பு நகராவிட்டால் ஆபத்து! EPDP எச்சரிக்கை

நிரந்தர அரசியல் தீர்வை நோக்கி தமிழர் தரப்பு நகராவிட்டால் பெருந்தேசியவாதம் குறுந்தேசிய வாதமும் தமது இருப்புக்காக எதையும் செய்யத் தயங்காது – ஈ.பி.டி.பியின் ஊடகப் பேச்சாளர் ஶ்ரீரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டு! நிரந்தர அரசியல் தீர்வை நோக்கி தமிழர் தரப்பு நகராவிட்டால் பெருந்தேசியவாதம் குறுந்தேசிய வாதமும் தமது... Read more »