யாழில் ஒரே நாளில் உயிரிழந்த இரு முதியவர்கள்!

யாழ்ப்பாணத்தில், நேற்று புதன்கிழமை (13) இருவேறு இடங்களில் திடீரென மயங்கி விழுத்த முதியவர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி சங்கானை பகுதியில் உள்ள அரைக்கும் ஆலையில், அரைக்க கொடுத்து விட்டு , கதிரையில் காத்திருந்தவர் திடீரென மயங்கி விழுந்த நிலையில் சங்கானை பிரதேச... Read more »

இந்திய மீனவர்கள் அறுவர் கைது

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 6 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஒரு படகும் கைப்பற்றப்பட்டது. யாழ்ப்பாணம் – காரைநகர் கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே நேற்று மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களை காங்கேசன்துறை கடற்படை... Read more »
Ad Widget

சாவகச்சேரியில் கஞ்சாவுடன் இருவர் கைது

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் பயணித்த வாகனத்தையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கிளிநொச்சி பகுதியில் இருந்து கேரளா கஞ்சாவை கடத்தி வருவதாக இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலிற்கமைய சாவகச்சேரியில் பொலிஸாருடன் இராணுவ... Read more »

யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பப் பெண் மரணம்

யாழ்ப்பாணத்தில் இளம் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில், உடற்கூறுகள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உடுவில் – கற்பகப் பிள்ளையார் கோவிலடியைச் சேர்ந்த சண்முகநாதன் துசீந்தினி (வயது 26) என்ற குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி ஒரு வருடமே... Read more »

மருமகனின் தாக்குதலுக்கு இலக்கான மாமனார் பலி

மருமகனின் தாக்குதலுக்கு இலக்கான மாமனார் ஒருவர் உயிரிழந்த சம்பவம் இன்றையதினம் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் வதிரி, கரவெட்டி – நெல்லியடி பகுதியைச் சேர்ந்த நேசராசா அன்ரன் (வயது 50) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த 9ஆம் திகதி குறித்த நபரின்... Read more »

உலக தமிழர் பேரவையை வரவேற்கின்றார்களாம் ஈ.பி.டி.பி யினர்

உலக தமிழர் பேரவையின் வருகை போலி தேசியம் பேசுகின்ற சில குழுக்களுக்கு தடையாக இருக்கலாம். ஆனால், எம்மைப் பொறுத்தவரை புலம்பெயர் அமைப்புகள் யாரும் இங்கு வரலாம். அவர்களை வரவேற்க நாம் தயாராகவே இருக்கின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடகப் பேச்சாளரும் கட்சியின்... Read more »

யாழ் நெற்பயிர் செய்கையாளர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி!

யாழ். கைதடி கமநல சேவை நிலையப் பிரிவுக்குட்பட்ட கமக்கார அமைப்புகளை சேர்ந்த சிறு நெற்செய்கையாளர்களுக்கு ஜப்பானின் உதவியில் கிடைத்துள்ள யூரியா உரம் இலவசமாக விநியோகிக்கும் நடவடிக்கையானது இன்று புதன்கிழமை (13.12.2023) முதல் ஆரம்பமாவதாக, கமநல சேவை நிலைய பெரும்போக உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்துள்ளார். 30... Read more »

யாழ். பல்கலை மாணவன் கஞ்சாவுடன் கைது

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கஞ்சாவுடன் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கஞ்சாவுடன் குறித்த மாணவன் நேற்று கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட மாணவர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். Read more »

‘வடக்கில் களியாட்ட நிகழ்வு: கிளம்பியது கடும் எதிர்ப்பு

‘வடக்கில் DJ Night’ என்ற போர்வையில் அனுமதியின்றி இடம்பெறும் களியாட்ட நிகழ்வுகளுக்கு எதிராக யாழ்.மாநகர சபை வழக்கு தொடர வேண்டும் என முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் ச.சுகிர்தன் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர்... Read more »

யாழ் ஊடகவியலாளருக்கு கொலை அச்சுறுத்தல்!

யாழ்ப்பாணம் – கல்வியங்காட்டில் உள்ள ஊடகவியலாளர் ஒருவரின் வீடு புகுந்து சுமார் இருபதுக்கும் மேற்பட்ட இனந்தெரியாதோர் கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளார்கள். இந்த சம்பவம் நேற்று (11.12.2023) திங்கட்கிழமை மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது. போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தொடர்பான செய்தி ஒன்று இணையத்தள ஊடகம் ஒன்றில்... Read more »