யாழ் ஊடகவியலாளருக்கு கொலை அச்சுறுத்தல்!

யாழ்ப்பாணம் – கல்வியங்காட்டில் உள்ள ஊடகவியலாளர் ஒருவரின் வீடு புகுந்து சுமார் இருபதுக்கும் மேற்பட்ட இனந்தெரியாதோர் கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளார்கள்.

இந்த சம்பவம் நேற்று (11.12.2023) திங்கட்கிழமை மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தொடர்பான செய்தி ஒன்று இணையத்தள ஊடகம் ஒன்றில் வெளியானதாகவும் அந்தச் செய்தியை உடனடியாக இணையத்தளத்திலிருந்து அகற்றும்படி கூறியே இனந்தெரியாதோர் குறித்த ஊடகவியலாளருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளார்கள்.

இச் சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: webeditor