இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவித்தல்!

நாட்டில் பணவீக்க வீதம் குறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில், மே மாதம் பணவீக்க வீதம் குறைந்துள்ளதாக இலங்கைமத்திய வங்கி அறிவித்துள்ளது. குறைவடைந்த பணவீக்கம் இதன்படி, மே மாதம் நாட்டின் பணவீக்கமானது 21.1 வீதமாக பதிவாகியுள்ளது. அதேசமயம், கடந்த ஏப்ரல் மாதம் நாட்டின்... Read more »

நல்லூர் மங்கையற்கரசி வித்தியாலயத்தில் யோகா சான்றிதழ் வழங்கல்

வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் இளைஞர் விவகார அலகினால் உடல், உள மேம்பாட்டிற்காக இலவசமாக நடத்தப்பட்டு வருகின்ற யோகக்கலைக் கற்கை நெறியின் புதிய பிரிவு நல்லூர்க் கந்தன் ஆலயத்தின் பின் வீதியில் அமைந்துள்ள நல்லூர் மங்கையற்கரசி வித்தியாலயத்தில்10.06.2023 ஆம் திகதி ஆரம்பமானது. சனி, ஞாயிறு... Read more »
Ad Widget

பலகோடி ரூபா பெறுமதியிலான மருந்துகள் அழிப்பு!

பொலன்னறுவை மன்னம்பிட்டி அருகே கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான மருந்து பொருட்கள் அழிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொலன்னறுவை மனம்பிட்டிய பிரதேச வைத்தியசாலையின் இரண்டு களஞ்சியங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல கோடி ரூபா பெறுமதியான மருந்துகளே இவ்வாறு அழிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இரண்டு... Read more »

ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்!

இலங்கையில் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடுத்தவாரம் கொழும்பில் தங்கியிருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க Ranil Wickremesinghe தலைமையில், எதிர்வரும் 28ஆம் திகதி, ஜனாதிபதி செயலகத்தில், ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் விசேட கூட்டம் இடம்பெறவுள்ளது. குறித்த கூட்டத்தில், அனைத்து நாடாளுமன்ற... Read more »

சதொசா நிறுவனத்தில் இடம்பெற்ற மோசடி அம்பலம்

கடந்த 2015ஆம் ஆண்டில் லங்கா சதொச நிறுவனம் 6 பில்லியன் ரூபாய் பெறுமதியான அரிசி மோசடி ஒன்றில் ஈடுபட்டுள்ளது என கோப் குழுவில் அம்பலமாகியுள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற கோப் குழு கூட்டத்தில் இந்த விபரங்கள் பொதுஜன பெரமுணவின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற... Read more »

ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் விடுதலையான தமிழ் அரசியல் கைதி

ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் இன்றையதினம் இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவரும் நீண்டகாலமாக புதிய மகசின் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதியான 66 வயதுடைய கனகசபை தேவதாஸன் விடுதலை செய்யப்பட்டுள்ளார். புறக்கோட்டை ரயில் நிலையத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தற்கொலை... Read more »

எதிர்வரும் 30 ஆம் திகதி விசேட விடுமுறை

எதிர்வரும் 30 ஆம் திகதி வெள்ளிக்கிழமை விசேட வங்கி விடுமுறை தினமாக அரசாங்கம் அறிவித்துள்ளது. 29 ஆம் திகதி ஹஜ் பெருநாள் தினத்தை முன்னிட்டு 30 ஆம் திகதி இந்த விசேட விடுமுறை லழங்கப்படுகிறது. Read more »

பெண் என நினைத்து ஏமாந்த மாணவன்

பேஸ்புக்கில் பெண் போன்று நடித்து 14 வயது சிறுவனை கம்பஹா பிரதேசத்திற்கு வரவழைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். சம்பவத்துடன், தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கம்பஹா பொலிஸார் தெரிவித்தனர். வைத்தியசாலையில் மாணவன் துஷ்பிரயோகத்துக்கு உள்ளான சிறுவன் ருவன்வெல்ல... Read more »

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் இடையே சந்திப்பு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பு, பிரான்சில் புதிய உலகளாவிய நிதியுதவி ஒப்பந்தத்துக்கான உச்சிமாநாட்டில் பங்கேற்க ஜனாதிபதி அங்கு சென்றுள்ள நேரத்தில் நடைபெற்றது. இதேவேளை, ஏற்கனவே கடுமையான நிதி அழுத்தத்தில்... Read more »

உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் நிறைவடைந்தவுடன், க.பொ.த சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இந்நிலையில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள்களை ஜூலை... Read more »