அமெரிக்காவில் மாயமான இலங்கை கடற்படையினர் தொடர்பில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு!

அமெரிக்காவில் கூட்டுப்பயிற்சியில் பங்கேற்ற பின்னர் கப்பலில் இருந்து குதித்து தலைமறைவான இலங்கையின் ஒன்பது கடற்படை உறுப்பினர்களுக்கு எதிராகவும் அந்த நாட்டில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. காணாமல்போன அவர்களைக் கண்டுபிடிப்பதற்காக வோசிங்டனில் உள்ள இலங்கைத் தூதரகம், அமெரிக்க கடலோர காவல்படையினரின் தலையீட்டை உத்தியோகபூர்வமாக நாடியுள்ளது. அவர்கள்,... Read more »

யாழ் தேசிய பாடசாலை ஒன்றில் பாடசாலைக்குள் வைத்து பூட்டப்பட்ட மாணவன்

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பகுதியில் உள்ள பிரபல தேசிய பாடசாலை ஒன்றில், 8ம் வகுப்பு மாணவனை பாடசாலையினுள் வைத்து பூட்டிவிட்டு சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்: 8ம் வகுப்பு மாணவன் ஒருவன் உடல்நலமின்மை காரணமாக... Read more »
Ad Widget Ad Widget

சர்வதேச மன்னிப்புச்சபை விடுத்துள்ள வேண்டுகோள்!

ஆர்ப்பாட்டக்காரர்களிற்கு எதிராக மிகவும் கொடுரமான பயங்கரவாத தடைச்சட்டத்தை அரசாங்கம் பயன்படுத்தக்கூடாது எனவும் பயங்கரவாத தடைச்சட்டத்தை கைவிடவேண்டும் எனவும் சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது. அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளார் என்ற தகவலால் ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாக... Read more »

நீச்சல் தடாகத்திலிருந்து மீட்க்கப்பட்ட சிறுமியின் சடலம்

மஸ்கெலியா – மொக்கா தோட்டத்தை சேர்ந்த 17 வயதான சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கம்பஹா காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். நைவல வீதி – உடுகம்பளை பகுதியிலுள்ள வீட்டுக்கு குறித்த சிறுமி தொழிலுக்கு சென்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந் நிலையில் குறித்த வீட்டிலுள்ள நீச்சல் தடாகத்தில் இருந்து... Read more »

மின் கட்டணம் தொடர்பில் வெளியாகிய அதிர்ச்சியளிக்கும் தகவல்

நாட்டில் அண்மையில் மின் கட்டணம் 75 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டது. இருப்பினும், மின்சார சபை நட்டத்திலேயே இயங்குகிறது என மின்சார பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், விரைவில் 25% மின் கட்டணத்தை மேலும் அதிகரிக்க வேண்டும் என அந்த சங்கம் கூறியுள்ளது. மின் கட்டணத்தை அதிகரித்த... Read more »

2030 ஆம் ஆண்டு வரை ரணில் விக்கிரமசிங்கவே ஜனாதிபதி

இலங்கையின் ஜனாதிபதியாக எதிர்வரும் 2030 ஆம் ஆண்டு வரை ரணில் விக்கிரமசிங்கவே (Ranil Wickremesinghe) பதவி வகிப்பார். அதில் எவ்வித மாற்றுக் கருத்தும் கிடையாது. இந்நிலையில், சகல கட்சிகளும் எவ்வித பேதமும் இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு ஒத்துழைப்பு வழங்க... Read more »

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி கோரி இலங்கை பொலிஸ் தலைமையகத்திற்கு முன் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி கோரி இலங்கை பொலிஸ் தலைமையகத்திற்கு முன் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. நீதிக்கான கட்சி சார்பாற்ற மக்கள் ஒன்றியம் தலைமையில் இக் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கவனயீர்ப்பு போராட்டம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் 2019, 21 ஏப்ரல்... Read more »

பெண்களை வைத்து தவறான தொழில் ஈடுபடுத்திய இராணுவ வீரர் கைது!

வவுனியா, தேக்கவத்தை பிரதேசத்தில் தங்குமிட விடுதி ஒன்றில் இருந்து ரி.56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 30 தோட்டக்கள்,இராணுவ சீருடைக்கு சமமான சீருடையுடன் இராணுவ விசேட படைப்பிரிவின் முன்னாள் வீரர் உட்பட நான்கு பேரை கைது செய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைப்பற்றப்பட்ட தோட்டக்கள் குறித்த... Read more »

பெண்களுக்கு இரவு நேரங்களில் பணிபுரிய விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம் !

பெண்களுக்கு இரவு நேரங்களில் தொழில் புரிய விதிக்கப்பட்டுள்ள வரையறை நீக்கவும் மேலதிக காலம் சேவையில் ஈடுபடுத்த கூடிய நேர வரம்பை நீக்கவும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது. சட்டத்தில் மாற்றம் செய்யுமாறு அறிவிப்பு இதற்காக தொழில் சட்டத்தில் மாற்றங்களை செய்ய... Read more »

வெளிவர இருக்கும் உயர்தர பரீட்சை பெறுபேற்று முடிவுகள்

கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத்தராத உயர் தரப்பரீட்சை முடிவுகளை இந்த மாத இறுதியில் வெளியிட முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார். பரீட்சைக்கு தோற்றிய 3 லட்சத்து 45 ஆயிரத்து 300 பேர் உயர்தரப் பரீட்சையில் பாடசாலைகள் ஊடாக 2... Read more »