இலங்கையில் அறிமுகமாகும் இ-ரிக்கெற் முறை!

பொது போக்குவரத்து சேவைகளில் இ-ரிக்கெற் முறையை அறிமுகப்படுத்துவதற்கு நிதியமைச்சு அனுமதியளித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஏழு தேசிய பஸ் சங்கங்கள் இணக்கம் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த ஏழு தேசிய பஸ் சங்கங்கள்... Read more »

முகநூல் காதலால் பாடசாலை சென்று கொண்டிருந்த சிறுமிக்கு நிகழந்த சோகம்!

மினிபே, ஹசலக்க, மொறயாவில் உள்ள பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த சிறுமியை நபர் ஒருவர் கத்தியால் குத்தியுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் இன்று (08) காலை இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் தாக்குதல் நடத்திய நபரை கிராம மக்கள் பிடித்து ஹசலக்க... Read more »
Ad Widget

அமெரிக்க டொலரின் இன்றைய நிலவரம்

இன்று செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 08) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 315.1109 ஆகவும் விற்பனை விலை ரூபா 328.6038 ஆகவும் பதிவாகியுள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (08.08.2023) நாணய மாற்று விகிதங்கள்... Read more »

உயர்கல்விச் செலவிற்காக விபச்சரத்தில் ஈடுபட்ட பெண் கைது!

உயா்கல்விச் செலவுகளை சமாளித்துக் கொள்ள விபச்சாரத்தில் ஈடுபட்ட 14 யுவதிகள் உள்ளிட்ட 18 பேர் பொலிஸாராக் கைது செய்யப்பட்டுள்ளனர். தலங்கமை பிரதேசத்தில் யுவதிகள் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். நாட்டில் பொருளாதார நெருக்கடியால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நடுத்தர மக்களும் வறுமொகோட்டிற்கு வாழ்ம் மக்களும் பெரும்... Read more »

மலையக கட்சிகளுடனான சந்திப்பு ஒத்திவைப்பு!

மலையக கட்சிளுக்கும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில்(11.08.2023 ) ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொழும்பில் சந்திப்பை நடாத்த, ஜனாதிபதி செயலகம் விடுத்த அழைப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நுவரெலியாவில் எதிர்வரும் (12.08.2023) அன்றைய தினம் தமிழ் முற்போக்கு கூட்டணி, மலையகம் 200 ‘நாம் இலங்கையர்’ எனும் தொனிப்பொருளில்... Read more »

மோட்டார் சைக்கிளில் பொலிசாரின் உத்தரவை மீறி பயணித்தவர்களுக்கு நேர்ந்த கதி!

மாவத்தகம பகுதியில் பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த உந்துருளியில் மோதுண்ட உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவத்தகமவில் மெட்பொக்க காவல்நிலையத்தில் சேவையாற்றும் உத்தியோகத்தரே விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது அப் பகுதியில் இன்று காலை போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த அவர் சந்தேகத்திற்கிடமான... Read more »

அரச வைத்தியசாலைகளில் இன்சுலின் மருந்திற்கு தட்டுப்பாடு!

அரச வைத்தியசாலைகளில் இன்சுலின் மருந்திற்கு தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நோயாளர்கள் அவற்றை பணம் செலுத்தி கொள்வனவு செய்ய வேண்டியேற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப்பேச்சாளர், வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார். அதன் காரணமாக நீரிழிவு நோய் அதிகரித்து... Read more »

நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு!

நாட்டின் பாதுகாப்புக்காக ஆயுதப்படையினரை அழைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (8) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நாற்பதாவது அதிகாரம் கொண்ட பொது பாதுகாப்புச் சட்டத்தின் 12வது பிரிவின்படி அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய ஜனாதிபதி இந்த... Read more »

இலங்கை மாணவர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி வழங்கிய சச்சின் டெண்டுல்கர்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சச்சின் டெண்டுல்கர்,யுனிசெப் அமைப்பின் ஏற்பாட்டில் இலங்கைக்கு வருகை தந்துள்ளார். சப்ரகமுவ மாகாணத்தில் குறைந்த வசதியுடைய பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களின் விளையாட்டுத்திறமைகளை மேம்படுத்தும் நோக்கில் யுனிசெப் அமைப்பினால் மாணவர்களுக்கான கிரிக்கெட் பயிற்சி நடைப்பெற்றது. பாடசாலை மாணவர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி... Read more »

தொழிற்சாலை தீப்பரவலில் நபர் ஒருவர் உயிரிழப்பு!

கந்தானை பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரசாயன மூலப்பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றிலேயே இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீப்பரவலை கட்டுப்படுத்தும் பணிகளில் கம்பஹா மாநகர சபைக்கு சொந்தமான இரண்டு தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் Read more »