ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட ஆர்வமாக உள்ளதாக அக்கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் காரணமாக அவரது அமெரிக்க குடியுரிமையை ரத்துசெய்யும் ஆலோசனைகளை அவர் நடத்தி வருகிறார். எதிர்காலத்தில் இது தொடர்பான இறுதி முடிவை... Read more »
மியான்மரில் சிக்கியுள்ள 56 இலங்கையர்களை அவசர நடவடிக்கை மூலம் விடுவிக்க மியான்மர் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக மியான்மருக்கான இலங்கைத் தூதுவர் ஜனக பண்டார தெரிவித்துள்ளார். இலங்கை மற்றும் மியான்மர் வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இது தொடர்பில் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளதுடன், தீவிரவாத... Read more »
இலங்கையில் 6 இலட்சத்து 97, 800 குடும்பங்கள் தமது அன்றாட உணவுக்காக கடன் பெறுவதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளியியல் கற்கைகள் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார். மக்கள் தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் சமீபத்திய ஆய்வு அறிக்கையை மேற்கோள்காட்டி அவர்... Read more »
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் தமது குடும்ப உறுப்பினர்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என முன்னாள் ஜனாதிபதியும் குருணாகலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுன எடுக்கும் எந்தவொரு அரசியல் தீர்மானத்திலும் குடும்ப உறுப்பினர்கள் அங்கம் வகிப்பதில்லை. தேவையற்ற பொய்யான அறிக்கைகளால்... Read more »
ஐக்கிய மக்கள் சக்தியின் மத்திய செயற்குழுவுக்கு வடக்கை சேர்ந்த இரு தமிழ் இளைஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஐக்கிய மக்கள் சக்தியின் முல்லைத்தீவு மாவட்ட பிரதான அமைப்பாளரும் ஐக்கிய இளைஞர் சக்தியின் உப தலைவருமாகிய லக்ஷயன் முத்துக்குமாரசாமியும் , வவுனியா மாவட்ட அமைப்பாளர் நிரோஸ்குமார் சாந்திகுமார் ஆகியோர்... Read more »
இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக சேனுகா திரேனி செனவிரத்ன (Kshenuka Dhireni Senewiratne)நியமிக்கப்பட்டுள்ளார். சேனுகா திரேனி செனவிரத்ன நேற்று தனது நற்சான்றிதழ்களை இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவிடம் ஒப்படைத்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சேனுகா திரேனி செனவிரத்ன, ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்திர வதிவிடப் பிரதிநிதியாகவும்... Read more »
கடும் வறுமை நிலைக்கு ஆளாகியுள்ள இலங்கையர்களின் எண்ணிக்கை 50 இலட்சத்தை தாண்டியுள்ளதாக குடிசன மற்றும் புள்ளிவிபர திணைக்கள அறிக்கையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியுடன் வரி சுமை மக்கள் மீது சுமத்தப்பட்டதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019 காலப்பகுதியில் வறுமை... Read more »
பண்டாரநாயக்க விமான நிலையத்தில் தானியங்கி முக அடையாளம் காணும் புதிய சோதனைக் கருவி (Automated Facial Recognition System) ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. குற்றச் செயல்கள் மற்றும் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் வரும்போது அல்லது வெளியேறும்போது அவர்களை அடையாளம் காணும் வகையில் இந்த அமைப்பு... Read more »
நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தின் அறிக்கையின்படி கோழி இறைச்சியின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. அதன்படி ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் சில்லறை விலை 40 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அதேவேளை உயிருள்ள கோழி ஒன்றின் விலை 20... Read more »
லங்கா சதொச நிறுவனத்தில் விற்பனை செய்யப்படும் பல உணவுப் பொருட்களின் விலைகளை மேலும் குறைக்க வர்த்தக அமைச்சு திட்டமிட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் தற்போதுள்ள 450 லங்கா சதொச கிளைகள் இவ்வருடம் 500 ஆக அதிகரிக்கப்படவுள்ளது. பொருட்களின் விலை குறையும் இந்தநிலையில், சதொச கிளைகளின் எண்ணிக்கையை... Read more »

