சிறைச்சாலைகளில் தொற்று நோய் பரவல்

சிறைச்சாலைகளில் தொற்றுநோய் தாக்கம் அதிகரித்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சிறைச்சாலைகளில் போதைப்பொருள் பாவனையாளர்கள் அதிகரித்துள்ளதன் காரணமாக இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் சிறைச்சாலை திணைக்களத்தின் சுகாதார பிரிவு தீவிர கவனம் செலுத்தி வருவதாக சிறைச்சாலை சுகாதர சேவைகள் பணிப்பாளர் வைத்தியர்... Read more »

இலங்கை இந்தியாவிற்கு இடையில் பாலம்

தென்னிந்தியாவையும் இலங்கையையும் இணைக்கும் வகையில் மன்னாரிலிருந்து இந்தியாவுக்கான நில ரீதியிலான தொடர்பை ஏற்படுத்துவது குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் தான் கலந்துரையாடியதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுடன் அண்மையில் யாழ்.ஜெட்விங் ஹோட்டலில் இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே... Read more »
Ad Widget

தனித்து வாழும் விலங்குகள் அதிகரிப்பு

தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் கூண்டுக்குள் தனித்து வாழும் விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. தேசிய கணக்காய்வு அலுவலகம் சமர்ப்பித்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் 15 விலங்குகள் கூண்டுகளில் தனியாக வாழ்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், 35 விலங்குகள் ஆன் துணை இன்றியும்,... Read more »

காணி மற்றும் வாகனம் வாங்குபவர்களுக்கான வரி தொடர்பில்

இலங்கையில் ஒருவர் வாகனம், நிலம் அல்லது வீடு வாங்கினால் மட்டும் அந்த நபர் வருமான வரி செலுத்த வேண்டியதில்லை என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஊழியர்களாக பணிபுரிந்து 12 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பளம் பெறுபவர்களுக்கு மட்டுமே வருமான வரி விதிக்கப்படுவதாக திணைக்களம்... Read more »

இரு கிரிக்கெட் வீரர்கள் பொலிஸ் திணைக்களத்தில் இணைவு!

இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் 4 பேர் உத்தியோகபூர்வமாக இணைந்துள்ளனர். குசல் ஜனித் பெரேரா மற்றும் சாமர சில்வா ஆகியோர் தலைமை பொலிஸ் ஆய்வாளர்களாகவும் அஷென் பண்டார மற்றும் நுவான் பிரதீப் ஆகியோர் பொலிஸ் ஆய்வாளர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். குறித்த 4 கிரிக்கெட்... Read more »

சமஷ்டியை பெற முயற்சிக்கும் தமிழ் தரப்பு

பௌத்த பிக்குகளின் ஆதரவை திரட்டி சமஷ்டியை பெற முயற்சிக்கும் தமிழ் பௌத்த பிக்குகளே இந்நாட்டில் ஒற்றையாட்சியின் காவலர்களாக இருந்துவருகின்றனர். இலங்கை சமஷ்டி நாடாவது அவர்களின் அழுத்தத்தால்௦தான் தடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையிலேயே தமிழ்ப் பிரிவினைவாதிகள் தற்போது பிக்குகளின் ஆதரவை பெறும் சூழ்ச்சி நடவடிக்கையில் இறங்கியுள்ளனர் என்று... Read more »

வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்றுத் தருவதாக பணமோசடியில் ஈடுபட்ட நபர் கைது!

பாணந்துறை பிரதேசத்தில் வெளிநாட்டு வேலை வாய்ப்பை பெற்று தருவதாக கூறி 16 இலட்சம் ரூபாவிற்கு மேல் பண மோசடி செய்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் குளியாப்பிட்டிய விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர்... Read more »

கொழும்பில் தற்க்காலிகமாக மூடப்பட்டுள்ள வீதிகள்!

வெல்லம்பிட்டிய சந்தியில் இருந்து கொட்டிகாவத்தை சந்தி வரையான வீதிப் பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வெல்லம்பிட்டிய பகுதியில் உள்ள பாலம் ஒன்றில் திருத்தப்பணிகள் இடம்பெறுவதால் குறித்த வீதிப் பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இந்த வீதி இன்றையதினம் (07-01-2024) மாலை 5 மணி வரை... Read more »

ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணையும் இரு பிரதான கட்சிகளின் உறுப்பினர்கள்

ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான புதிய கூட்டணியின் பதிவு எதிர்வரும் 11ஆம் திகதி உத்தியோகபூர்வமாக மேற்கொள்ளப்படவுள்ளது. அதற்கான இருதரப்பு பேச்சுவார்த்தை அடுத்த வாரம் தொடங்கும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இதனடிப்படையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஸ்ரீலங்கா... Read more »

உச்சம் தொட்ட இஞ்சியின் விலை!

நாட்டில், வரலாறு காணாத அளவுக்கு இஞ்சியின் விலை அதிகரித்துள்ளதாக இஞ்சி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இதன்படி, ஒரு கிலோ உலர் இஞ்சியின் விலை 3000 ரூபாவைத் தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழநிலையில், இஞ்சி தேவையை பூர்த்தி செய்ய முடியாத காரணத்தால் விலை அதிகாரித்துள்ளதாக இஞ்சி மொத்த... Read more »