அநுரவின் டில்லி பயணத்தால் சீனா அதிருப்தி

இந்திய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் தலைநகர் புதுடில்லிக்குச் சென்றுள்ள ஜே.வி.பி எனப்படும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான உயர்மட்ட குழுவினர் பல்வேறு அதிகாரப்பூர்வ சந்திப்புகளை நடத்தி வருகின்றனர். நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கரை சந்தித்த அநுரகுமார திஸாநாயக்க,... Read more »

தேசிய மக்கள் சக்தியின் பதிவை கேள்விக்குட்படுத்தும் நாகானந்த

தேசிய மக்கள் சக்தியை (National People’s Power) தேர்தல்கள் ஆணைக்குழு பதிவு செய்ததை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்குவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வினிவித பெரமுனவை அரசியல் கட்சியாக பதிவு செய்வதை நிராகரித்து தேர்தல்கள்... Read more »
Ad Widget

பொருளாதாரத்தை மறுசீரமைக்க அனைத்துக் கட்சிகளுக்கும் ஜனாதிபதி அழைப்பு

இலங்கை பொருளாதார ரீதியாக ஸ்திரத்தன்மை அடையும் சூழல்நிலை உருவாகும் போது மக்கள் மீதான வரிச்சுமை குறைக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ஒன்பதாவது நாடாளுமன்றதின் ஐந்தாவது அமர்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று (07) சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. அரசாங்கத்தின் கொள்ளை... Read more »

பொருளாதார முன்னேற்றத்தில் கவனம் செலுத்திய ரணில்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கொள்கை விளக்க உரையில் இலங்கைத் தீவின் பொருளாதார முன்னேற்றங்கள் மற்றும் பலவீனங்கள் பற்றிய விபரங்கள் எதிர்கால பொருளாதார செயற்பாடுகள் தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்பட்டிருந்தது. இன்று புதன்கிழமை இலங்கை ஒற்றையாட்சி அரசின் நாடாளுமன்றத்தில் ஐந்தாவது கூட்டத்தொடரை ஜனாதிபதி ரணில் ஆரம்பித்து... Read more »

ஐ.ம.முன்னணியின் தலைமைத்துவ சபை தலைவராக முன்னாள் ஜனாதிபதி

ஐக்கிய மக்கள் முன்னணியின் தலைமைத்துவ சபையின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் முன்னணியின் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற செயற்குழு கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளர்... Read more »

நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்க கெஹலிய மறுப்பு

நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்க முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மறுத்துள்ளார். இன்று புதன்கிழமை நாடாளுமன்ற அமர்வு இடம்பெறுகின்றது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிறப்புரை ஆற்றுகின்றார். இந்த அமர்வில் பங்கு கொள்ளவே கெஹலிய மறுத்துள்ளார். தரமற்ற மருந்து இறக்குமதி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.... Read more »

அரசாங்கத்தின் எதிர்கால இலக்கு என்ன?

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது அமர்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கொள்கை விளக்க உரையுடன் இன்று புதன்கிழமை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட உள்ளது. ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் நான்காவது அமர்வு கடந்த 26ஆம் திகதி நள்ளிரவுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாக ஜனாதிபதி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டிருந்தார். அரசியலமைப்பின் 70... Read more »

மகளின் திருமண நிகழ்வில் விருந்தினர்களுக்கு ஹெல்மெட் வழங்கிய தந்தை

திருமண விழாவில் பங்கேற்பவர்களுக்கு திருமண வீட்டார் விருந்து கொடுத்து உபசரிப்பதுடன், தாம்பூல பைகள் கொடுப்பது வழக்கம். வசதியைப் பொறுத்து இந்த தாம்பூல பைகளில் உள்ள பொருட்கள் மாறுபடும். வெற்றிலை பாக்குடன் அவர்களின் வசதிக்கு ஏற்ப இனிப்பு வகைகள் மற்றும் பரிசுப்பொருட்களை வைத்து வழங்குகிறார்கள். சிலர்... Read more »

வைத்தியர்களின் நியமனம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

வைத்தியர் பற்றாக்குறைக்கு தீர்வாக எதிர்வரும் மார்ச் மாதம் மேலும் 1300 வைத்தியர்கள், அரச வைத்தியசாலைகளுக்கு நியமிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அவர்கள் தற்போது பயிற்சியை முடித்து வருவதாக சுகாதார செயலாளர் விசேட வைத்தியர் பாலித மஹிபால குறிப்பிட்டுள்ளார். கடந்த வாரம் பயிற்சி முடித்த 590... Read more »

ரமழான் பண்டிகைக்காக அரச ஊழியர்களின் பணி அட்டவணையில் மாற்றம்

ரமழான் காலப்பகுதியில் முஸ்லிம் அரச ஊழியர்கள் சமய வழிபாடுகளை மேற்கொள்வதற்கான பணி அட்டவணையை ஏற்பாடு செய்து  தருமாறு அரச நிறுவனங்களுக்கு பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது. அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் அரசியலமைப்புச் சபை தலைவர்களுக்கு... Read more »