வடக்கு, கிழக்கு மக்களின் வாக்கு ரணிலுக்கு: கருணா

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தானும் தனது கட்சியும் ஆதரவளிக்கவுள்ளதாக கருணா அம்மான் என அழைக்கப்படும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். பாணந்துறையில் நேற்று புதன்கிழமை (19) ஐக்கிய தேசியக் கட்சியின் அலுவலகத்தை திறந்து வைக்கும்... Read more »

முடிவுக்கு வருகிறது மஹிந்தவின் அரசியல் வாழ்வு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது அரசியல் வாழ்வில் இருந்து ஓய்வு பெற திட்டமிட்டுள்ளார். எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னாள் ஜனாதிபதி விரும்பவில்லை என நம்பத்தகுந்த அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உடல்நலக்குறைவு மற்றும் மருத்துவ பரிந்துரைகள் காரணமாக முழுநேர அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதில் உள்ள... Read more »
Ad Widget

ரணிலுக்கு எதிராக அரசியல் ஆட்டத்தை ஆரம்பித்தது : போராளிகள் குழு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கடந்த 2022ஆம் ஆண்டு ஜுன் மாதம் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டார். இலங்கைத் தீவில் இடம்பெற்ற கடுமையான போராட்டங்கள் காரணமாகவே ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டடிருந்தார் கோட்டாபய. கோட்டாபய ராஜபக்சவை பதவியிலிருந்து அகற்ற காலிமுகத்திடலை மையப்படுத்தி தொடர்ச்சியான போராட்டங்கள்... Read more »

சுதந்திரக் கட்சியின் தவிசாளராக நிமல்

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளராக நிமல் சிறிபால டி சில்வாவை நியமிக்க கட்சியின் நிறைவேற்றுக்குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது. அந்த கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற நிறைவேற்றுக்குழு கூட்டத்தின் போதே இந்த தேரத்வு இடம்பெற்றுள்ளது. இதேவேளை, கட்சியின் பொதுச்செயலாளராக நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க தேர்வு... Read more »

கடன் வழங்கும் நாடுகளுடன் விரைவில் உடன்படிக்கை: ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடன் வழங்கும் நாடுகளுடன் அடுத்த சில வாரங்களில் உடன்படிக்கை ஒன்றை எட்டவுள்ளதாக நம்பிக்கை வெளியிட்டுள்ளார். கடன் வழங்கும் நாடுகளுடனான பேச்சுவார்த்தைகள் தொடர்பான விவரங்களை வழங்கும் போது ஜனாதிபதி இந்த அறிவிப்பை வெளியிட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இன்று நடைபெற்ற... Read more »

பூசும் அரசியல்: மாடி குடியிருப்பில் அமைக்கப்பட்ட விசேட மையம்

தேசிய மக்கள் சக்தியின் எதிர்காலச் செயல்பாடுகள் மற்றும் அவர்களது வேலைத்திட்டங்கள் மக்களை கவரும் வகையில் முன்னெடுக்கப்பட்டு வருவதால் அக்கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க மற்றும் கட்சியை இலக்குவைத்து சேறு பூசும் அரசியலை செய்வதற்கு விசேட மையமொன்று உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொழும்பில் உள்ள அடுக்குமாடி... Read more »

இலங்கையில் 58,304 பேருக்கு இரட்டைக் குடியுரிமை

2015 மற்றும் 2020 க்கு இடையில் இலங்கையில் 58,304 பேருக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. காலி மாவட்ட சபை உறுப்பினர் கயந்த கருணாதிலக எழுப்பிய கேள்விக்கு பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் நேற்று (18) பாராளுமன்றத்தில் வழங்கிய பதிலில் இது தெரியவந்துள்ளது. இது... Read more »

ஜனாதிபதிக்கு எதிராக திரும்பிய அரசியலமைப்புச் சபை

சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்தின் சேவை நீடிப்பு தொடர்பான யோசனையை அரசியலமைப்பு பேரவை நிராகரித்துள்ளது. சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்தின் சேவைக்காலத்தை ஆறு மாதங்கள் நீடிக்கும் முன்மொழிவை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசியலமைப்பு சபைக்கு வழங்கியிருந்த நிலையில் அது தொடர்பில் இறுதித் தீர்மானம் எதுவும்... Read more »

பௌத்த சமய சட்டத்தில் கை வைக்கும் உரிமை தமிழ் அரசியல் தலைவர்களுக்கு கூட இல்லை: அனுரகுமார

பௌத்த மத அடிப்படையில் வாழ்வது தேசிய மக்கள் சக்தி மாத்திரமே எனவும் அரசியலமைப்பின் 9 ஆவது சரத்தில் கை வைக்கும் உரிமை தமிழ் அரசியல் தலைவர்களுக்கு இல்லை என அதன்தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார். ஜேவிபியின் அரசியல் கூட்டணி எனப்படும் தேசிய மக்கள்... Read more »

அனுரவின் அடுத்த பாய்ச்சல்: கதிகலங்கியுள்ள ரணில், சஜித்

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. பிரதானக் கட்சிகளும் வேட்பாளர்களும் தமது தேர்தல் பிரகடனத்தை தயார்ப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் தேசிய பொருளாதாரத்தை முழுமையாக மீட்டெடுக்கும் திட்டங்களுடன் தமது தேர்தல் பிரகடனத்தை தேசிய மக்கள் சக்தி தயார்ப்படுத்தி வருகிறது. பேராசிரியர்கள், பொருளாதார நிபுணர்கள்... Read more »