தேசிய மக்கள் சக்தியின் எதிர்காலச் செயல்பாடுகள் மற்றும் அவர்களது வேலைத்திட்டங்கள் மக்களை கவரும் வகையில் முன்னெடுக்கப்பட்டு வருவதால் அக்கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க மற்றும் கட்சியை இலக்குவைத்து சேறு பூசும் அரசியலை செய்வதற்கு விசேட மையமொன்று உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொழும்பில் உள்ள அடுக்குமாடி (அப்பார்ட்மென்ட்) குடியிருப்பில் இதற்காக விசேட மையமொன்று அமைக்கப்பட்டுள்ளது.
அனுரகுமார திஸாநாயக்க விடும் தவறுகள் அல்லது அவரது தவறான கருத்துகளை சமூக ஊடகங்களில் சேறு பூசும் வகையில் பரப்புவது இந்த மையத்தில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளவர்களின் பணியாகும்.
தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள ஆதரவு வலையத்தை உடைத்தெறிந்து அவர்கள் தொடர்பில் நம்பிக்கையின்மையை தோற்றுவிப்பதும் இவர்களது பணியாகும்.
இந்த மையத்தின் செயல்பாடுகளை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல்வரை கொண்டுசெல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.