வன்னி ஊடகவியலாளரின் புகைப்படங்களுக்கு ஐ.நா அங்கீகாரம்

இலங்கையில் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் வெளியிடப்பட்ட விசேட அறிக்கைக்காக, வன்னியில் முன்னணி தமிழ் ஊடகவியலாளர் ஒருவர் எடுத்த புகைப்படங்களை ஐக்கிய நாடுகள் சபை பயன்படுத்தியுள்ளது. மே 21 அன்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தால் வெளியிடப்பட்ட “பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின்... Read more »

மரம் முறிந்து விழுந்து தோட்டத் தொழிலாளி பலி

பலத்த காற்று காரணமாக மரம் முறிந்து விழுந்ததில் கஹவத்த ஓபாத்த தோட்டத்தில் பணிபுரிந்து வந்த தோட்டத் தொழிலாளி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றர். இவர்கள் மூவரும் குறித்த தோட்டத்தில் தேயிலைச் செடிகளுக்கு உரம் இட்டுக் கொண்டிருந்த... Read more »
Ad Widget

மீன் தட்டுப்பாடு: சீரற்ற காலநிலையால் விலைகளும் அதிகரிப்பு

சீறற்ற காலநிலை காரணமாக மீன்பிடி அண்ணளவாக குறைந்துள்ளது. இதனால், உள்ளூர் சந்தையில் மீன் மற்றும் கோழி உள்ளிட்ட இறைச்சி வகைகளின் விலை அதிகரித்துள்ளதாக தேசிய நுகர்வோர் அதிகார சபை (NCF) தெரிவித்துள்ளது. கடல் சீற்றம் காரணமாக மீன்பிடிக்க வேண்டாம் என வானிலை ஆய்வு மையம்... Read more »

வடக்கில் சூடு பிடிக்கும் பொது வேட்பாளர் : கூட்டம் நடத்தும் சுமந்திரன்

சிவில் சமூக அமைப்புகளின் பொதுவேட்பாளர் தொடர்பான முற்சிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் வெளியிடும் கருத்துக்கள் குழப்பங்களை எற்படுத்தியுள்ளன. பொதுவேட்பாளர் தொடர்பாக சிவில் சமூக அமைப்புகள் ஆரம்பம் முதலே கலந்துரையாடி வருகின்றன.... Read more »

பொது வேட்பாளருக்கான அவசியம்: யாழ்ப்பாணம் வணிகர் கழகமும் ஆதரவு

இலங்கைத்தீவில் எதிர்வரும் நாட்களில் இடம்பெறவுள்ளதாக தீர்மானிக்கப்பட்டுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் பாரிய எதிர்ப்பார்ப்புகள் நாளுக்கு நாள் எழுந்த வண்ணமே உள்ளன. இந்நிலையில், எதிர்வரும் இரு தேர்தல்களையும் இரண்டு வருடங்களுக்கு ஒத்திவைக்க ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்திருந்தது. தமிழர் தரப்பு பொது... Read more »

தேர்தலை ஒத்திவைப்பது ஜனநாயகத்துக்கு ஆரோக்கியமானதல்ல: நாமல்

தேர்தல் ஒத்திவைக்கப்படுகின்றமையானது, ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமானதல்ல என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தனது X வலைத்தளத்தில் பதிவொன்றை பதிவிட்டு இதனைக் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து குறித்த பதிவில், ஜனாதிபதியினதும், பாராளுமன்றத்தினதும் காலத்தை நீடிப்பதானது, ஜனநாயக சமூகத்தின் அடிப்படை... Read more »

“ஜனாதிபதி தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்படும்”

அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தல் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் நடத்தப்படும் எனவும் அதனை ஒத்திவைக்கும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா தெரிவித்தார். ஊடகங்களுக்கு விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ள அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் பிரகாரம், ஜனநாயகத்தை பாதுகாத்து ஜனாதிபதி... Read more »

ரணிலின் பதவிக் காலத்தை நீடிக்க சட்டத்தில் இடமுண்டா?

எதிர்வரும் இரு தேர்தல்களையும் இரண்டு வருடங்களுக்கு ஒத்திவைக்க ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. எதிர்பார்த்தபடி ஜனாதிபதித் தேர்தலையோ, நாடாளுமன்றத் தேர்தலையோ நடத்தாது ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத்தின் பதவிக் காலத்தை நீடிக்க சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சி... Read more »

ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு: மேலும் இருவர் கைது

ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி கொழும்பு பகுதியில் கைது செய்யப்பட்ட நபருடன் நெருங்கிய உறவைப் பேணி வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் ஹலவத்தை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சகோதரர்களில் ஒருவர் வெளி மாகாணத்தில் உள்ள... Read more »

சர்வதேச தெங்கு சமூகத்தின் 60ஆவது கூட்டத்தொடர் இலங்கையில்

சர்வதேச தெங்கு சமூகத்தின் 60ஆவது கூட்டத்தொடர் மற்றும் அமைச்சர்களின் சந்திப்பை இவ்வாண்டில் இலங்கையில் நடாத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. அதற்கமைய, தெங்கு அபிவிருத்தி அதிகாரசபையால் ஈட்டப்பட்ட வருமானம் மற்றும் தெங்குத் தொழிற்துறையில் தனியார் நிறுவனங்கள் சிலவற்றின் ஒத்துழைப்புடன் குறித்த கூட்டத்தொடர் மற்றும் அமைச்சர்களின் சந்திப்பை இவ்வாண்டில் நவம்பர்... Read more »