கபொத சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் செப்டம்பர்

கபொத சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் செப்டம்பர் மாதமளவிலேயே வெளியாகும்; 10 நாட்களில் வெளியாகுமென நேர்காணல் ஒன்றில் தவறுதலாகக் குறிப்பிடப்பட்டது – பரீட்சைகள் ஆணையாளர்

2023ஆம் ஆண்டின் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் செப்டம்பர் மாதமளவிலேயே வெளியாகும் எனப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.

பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 10 நாட்களில் வெளியாகுமென பத்திரிகைகளில் செய்தி வெளியாகி இருந்தது.

எனினும் தாம் வழங்கிய நேர்காணல் ஒன்றில் அவ்வாறு தவறுதலாகக் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிவித்த பரீட்சைகள் ஆணையாளர், இது தொடர்பாக தெளிவுபடுத்தி அறிக்கை ஒன்றை வெளியிடவிருப்பதாகவும் கூறியுள்ளார்.

Recommended For You

About the Author: admin