கொள்ளையர்கள், கொலையாளிகள் எங்கள் ஆட்சியில் தப்பவே முடியாது: தேசிய மக்கள் சக்தி

“தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் கள்வர்கள், கொலையாளிகள் தப்பவே முடியாது. உரிய வகையில் விசாரணைகள் நடத்தப்பட்டு, சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் பீதியடைந்துள்ள சிலரே, தற்போது கூச்சலிடுகின்றனர்.” – இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.... Read more »

பொதுமக்கள் சொத்துக்கள் கொள்ளையடித்து பெருமை பேசுகிறார்கள்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளருமான நாமல் ராஜபக்சவை கைது செய்ய வேண்டும் என “ப்ளஸ் வன்“ (Plus One) என்ற அமைப்பு வலியுறுத்தியுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை நாட்டு மக்கள் ஜனாதிபதியாக தெரிவு செய்ததன் நோக்கம் ராஜபக்ச... Read more »
Ad Widget

வடிவேல் சுரேஷூக்கு ஆதரவு வழங்க தயார்: ஐக்கிய ஜனநாயக முன்னணி

ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சியானது எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சியுடன் இணைந்து செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பதுளை மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிடுவதற்காக ஐக்கிய ஜனநாயக முன்னணி வேட்புமனு தாக்கல் செய்திருந்தது.... Read more »

ஜே.வி.பியின் கருத்துக்கு எதிராக விக்கி போர்க்கொடி

“அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் எங்களுக்கு எந்தக் காலத்திலும் ஒரு நிரந்தர தீர்வாக அமையாது. ஆனாலும், இப்போது இருக்கும் 13 ஐயும் நாங்கள் பறிகொடுத்துவிட்டு ஜே.வி.பியினர் கூறுவது போன்று எல்லோரும் சமம் என்று போனால் அது மிகப் பெரிய ஆபத்தாகும்.” – இவ்வாறு... Read more »

தேர்தல் நெருங்குவதால் நெருக்கடியில் அரசு

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பிலான இரண்டு ஜனாதிபதி ஆணைக்குழுக்களினதும் விசாரணை அறிக்கைகளை உடனடியாக அரசாங்கம் வெளியிட வேண்டும் எதிர்க்கட்சிகளால் அழுத்தகம் கொடுக்கப்பட்டு வருவதால் அவற்றை பகிரங்கப்படுவது குறித்து அரச உயர்தட்டத்தில் ஆலோசனைகள் நடத்தப்பட்டுள்ளன. ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதிகளான... Read more »

நாடாளுமன்ற தேர்தலில் அநுர 113 ஆசனங்களை பெறுவாரா?

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியாக பதவியேற்றபோது இலங்கையின் கடைசி நிறைவேற்று ஜனாதிபதியாகவே அவர் திகழ்வார் என அவரது கட்சியின் மூத்த தலைவர்கள் பல இடங்களில் மார் தட்டியிருந்தனர். ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் நாடாளுமன்றத்தை கலைத்து இடைக்கால அரசாங்கம் ஒன்றை நிறுவி இப்போது... Read more »

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வரப்பிரசாதங்கள் அவசியமா?

முன்னாள் ஜனாதிபதிகள், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் வரப்பிரசாதங்கள் தொடர்பிலான காரணிகளை ஆராய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மூலம் நியமிக்கப்பட்ட மூவர் அடங்கிய குழு தமக்கான வரப்பிரசாதங்கள் மற்றும் அவற்றுக்கான தேவை தொடர்பில் எழுத்து மூலம் அறியப்படுத்துமாறு முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அறிவித்துள்ளனர். அதன்படி,... Read more »

கிராண்ட்பாஸ் துப்பாக்கிப் பிரயோகம்: கொலையாளிகள் தப்பிச் சென்ற கார் கண்டுபிடிப்பு!

கொழும்பு கிராண்ட்பாஸ்பகுதியில் முச்சக்கரவண்டியில் சென்ற ஒருவரைச் சுட்டுக் கொல்வதற்காக கொலையாளிகள் பயன்படுத்திய கார் ஹங்வெல்ல அம்குகம பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் இன்று (17) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஹங்வெல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர். இன்று (17) அதிகாலை 4 மணியளவில் காரை எடுத்துக். கொண்டு விஹாரை ஒன்றின் வளாகத்துக்கு... Read more »

வாடகைக்கு வீடுகளை வழங்குவது தொடர்பில் வெளியான அறிவுறுத்தல்!

வீடுகளை வாடகைக்கு விடும்போது மிகவும் கவனமாக இருக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். வெளிநாட்டவர்களுக்கு வீடு வழங்குவதில் விசேட கவனம் செலுத்த வேண்டும். அந்த வெளிநாட்டினரின் செயற்பாடுகளை கண்டறிந்து அவர்களுக்கு வீடுகளை வழங்குவது மிகவும்... Read more »

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் விவகாரம்: அரசாங்கத்திடம் ரவி குமுதேஷ் கோரிக்கை!

“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கையினை வெளியிடுவது ஜனாதிபதியின் பொறுப்பாகும்” என ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சியின் ஊடகப்பேச்சாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” உயிர்த்த ஞாயிறு தாக்குதல்... Read more »