நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் முழுமையாக பூர்த்தியாகியுள்ளதுடன், இறுதிகட்ட பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்தது. தபால் மூலமான வாக்களிப்பு இன்று வெள்ளிக்கிழமையுடன் நிறைவுக்கு வருவதாகவும் ஆணைக்குழு கூறியது. நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் வியாழக்கிழமை (நவம்பர் 14ஆம் திகதி) இடம்பெற உள்ளது. தேர்தலை... Read more »
விரிவாக்கப்பட்ட செயற்திட்டத்துக்கு அமைய இலங்கைக்கு மூன்றாவது தவணை கடனை வழங்குவதற்கான மதிப்பாய்வுகளை மேற்கொள்ள சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்ட குழுவொன்று எதிர்வரும் 14ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளது. இம்மாதம் முதல் வாரத்தில் இந்த குழு இலங்கைக்கு பயணத்தை மேற்கொள்ள திட்டமிட்டிருந்த போதிலும் பொதுத்... Read more »
பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட உரிமம் பெற்ற துப்பாக்கிகளை மீள ஒப்படைப்பதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 21 ஆம் திகதிக்கு முன்னர் துப்பாக்கிகளை ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. துப்பாக்கிகளை மீள கையளிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சு ஒரு மாத கால அவகாசம் வழங்கியதுடன் அந்த... Read more »
2024 க.பொ.த உயர்தர பரீட்சை நவம்பர் 25ஆம் திகதி ஆரம்பமாகி டிசம்பர் 20ஆம் திகதிவரை நடைபெறும் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்தப் பரீட்சைக்கு விண்ணப்பித்த பாடசாலை மாணவர்களின் அனுமதி அட்டைகள் மற்றும் நேர அட்டவணை அந்தந்த பாடசாலை அதிபருக்கும், தனிப்பட்ட விண்ணப்பதாரர்களின் அனுமதி... Read more »
கடவுசீட்டுகளை ஒரே சந்தர்ப்பத்தில் பெற்றுக் கொள்வதற்கு பதிலாக தொகுதி தொகுதியாக பெற்றுக் கொள்ளும் வகையிலேயே கடந்த அரசாங்கம் இணக்கப்பாட்டை எட்டியுள்ளது. எனவே தான் மக்களின் தேவைக்கேற்ப அவற்றை வழங்க முடியாத நிலைமை ஏற்பட்டது. எனினும் தற்போது வரிசைகள் இல்லாமலாக்கப்பட்டு கடவுசீட்டு விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை... Read more »
“அரச சேவையில் அரசியல் ரீதியிலான தலையீடுகள் மேற்கொள்ளப்பட மாட்டாது” – ஜனாதிபதி அநுரகுமார தெரிவிப்பு. அடுத்த ஐந்து வருடங்களில் கிராம மக்களின் வறுமையை இல்லாதொழித்து அந்த மக்களின் பொருளாதாரம் மற்றும் சமூக அந்தஸ்தை உயர்த்துவது அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க... Read more »
பனை அபிவிருத்திச் சபை முன்பு மக்கள் போராட்டம்! “ஊழல் – மோசடியில் ஈடுபட்டவர் பனை அபிவிருத்தி சபையின் தலைவராக நியமனம்” Read more »
நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் 14ஆம் திகதி நடைபெற உள்ள நிலையில், பிரச்சார நடவடிக்கைகள் 11ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவுக்கு கொண்டுவரப்பட வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. பொதுத் தேர்தலுக்கான நாள் நெருங்கி வருவதால் பிரதானக் கட்சிகளும், ஏனைய கட்சிகளும், சுயேச்சை குழுக்களும் இறுதிகட்ட பரப்புரைகளில்... Read more »
இலங்கையில் காணப்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக வாகன இறக்குமதியை கட்டுப்பாடுகள் விதித்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வரியற்ற வாகன அனுமதிப்பத்திரங்கள் வழங்குவதை நிறுத்தியிருந்த 2023ஆம் ஆண்டில் வரியற்ற வாகன அனுமதிப்பத்திர முறைமையில் 10 பேர் வாகனங்களை இறக்குமதி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை சுங்க திணைக்களம்... Read more »
இலங்கையின் கடந்த அரசாங்கங்களில் பதவி வகித்த அரசியல்வாதிகள் மற்றும் அரசாங்கத்திற்கு தொடர்புடைய பிரபுக்கள் பயன்படுத்திய பதிவு செய்யப்படாத வாகனங்களை தேடுவதற்காக பொலிஸார், சுங்க திணைக்களம் மற்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் என்பன இணைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளவுள்ளன. இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கும் தகவல்களை அடிப்படையாகக்... Read more »

